states

img

மோடி பிரதமரான பின் வாழ்க்கைத்தரம் படுமோசம்!

புதுதில்லி, பிப்.2- நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து வரும் விலை வாசி உயர்வால், தங்களின் வாழ்க் கைத் தரம் படுமோசமான நிலைக்கு சென்றிருப்பதாக, கருத்துக் கணிப்பில் 62.4 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். ஒன்றிய அரசின் 2022-23 நிதி யாண்டிற்கான பட்ஜெட்டையொட்டி நாட்டில் பணவீக்கம் மற்றும் பொரு ளாதார நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து நாடு தழுவிய கருத்துக் கணிப்பை ‘சி-வோட்டர்’ (CVoter)நிறு வனத்துடன் இணைந்து ஏபிபி செய்தி நிறுவனம் (ABP NEWS) கடந்த வாரம் நடத்தியது. அதன் முடிவுகளைத் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், நரேந்திர மோடி பிரதம ரான பிறகு பொதுவாக பணவீக்கம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு, ஏபிபி-சிவோட்டர் கருத்துக் கணிப்பில், 27.5 சதவிகித மக்கள் மோடி அர சாங்கத்தின் கீழ் பணவீக்கம் கட்டுப் படுத்தப்பட்டு விலை குறைந்துள்ள தாக தெரிவித்துள்ளனர். அதே நேரத் தில் 62.4 சதவிகித மக்கள், ஒன்றிய அர சால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வில்லை என்றும் விலைகள் உயர்ந் துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 10.1 சதவிகிதம் பேர் மட்டும் எதுவும் மாறவில்லை, விலைவாசி அப்படியே உள்ளது என்று கூறியுள்ளனர்.

கடந்த ஓராண்டில்; பணவீக்க நிலை உங்கள் வாழ்க்கைத் தரத்தில் பாதக மான விளைவை - மோசமான தாக் கத்தை ஏற்படுத்தியதா? என்ற கேள் விக்கு 49.3 சதவிகித மக்கள், பண வீக்கம் கடந்த ஓராண்டில் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக தெரி வித்துள்ளனர். 42.3 சதவிகித மக்கள் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தாகவும், 8.3 சதவிகித மக்கள் பண வீக்கத்தால் தங்கள் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படவில்லை என்றும் கூறி யுள்ளனர். பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, 25.6 சதவிகிதம் பேர் ஒன்றிய அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும், 36.4 சதவிகிதம் பேர் எதிர்பார்த்ததை போலத்தான் உள்ளது என்றும் கூறி யுள்ளனர்.

அதேநேரம், 38.0 சதவிகித மக்கள் எதிர்பார்த்ததை விட மோச மாக செயல்பாட்டை கொண்டிருக்கி றது என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஓராண்டில் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய கேள்விக்கு 42.4 சதவிகிதம் பேர் மோசம் அடைந்துள்ளதாக கூறியுள்ள னர். 32.8 சதவிகிதம் பேர் எந்த மாற்ற மும் ஏற்படவில்லை என்றும் 24.8 சத விகிதம் பேர் முன்னேற்றம் காணப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்த ஓராண்டில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 37.7 சதவிகிதம் பேர் முன்னேற்றம் இருக்கும் என்று நம்பிக்கை தெரி வித்துள்ளனர். அதே சமயம் 31.3 சத விகிதம் பேர் மோசம் அடையும் என்றும் 31 சதவிகிதம் மக்கள் எந்த மாற்றம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ள னர்.