states

img

முஸ்லிம் பெண்களை வல்லுறவு செய்வேன் என மிரட்டிய சாமியார்!

லக்னோ, ஏப்.9- உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர், “முஸ்லிம் பெண் களைப் பாலியல் வல்லுறவு செய்வேன்” என்று பகிரங்க மிரட் டல் விடுத்த சம்பவத்தில், 6 நாட்க ளுக்குப் பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி. மாநிலம் சீதாபூரில் மஹ ரிஷி ஸ்ரீலஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலை மை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனிதாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2-இல் சீதாபூரில்  நடைபெற்ற ஆன்மீக ஊர்வலத் தில் கலந்து கொண்டார். ஏகே-47 துப்பாக்கிகள் ஏந்திய போலீசார்  பாதுகாப்புடன் அவர் வாகனத் தில் வலம் வந்தார்.  ஊர்வலம் சீதாபூரின் கைரா பாத் பகுதியின் மசூதியைக் கடந்து சென்றது. அப்போது துறவியான பஜ்ரங் முனி தாஸ், முஸ்லிம் பெண்களை மிரட்டும் வகையில், வாகனத்தில் அமர்ந்தபடியே பேசினார். ‘‘இதை நான் மிகவும் அன்பான வார்த்தைகளால் கூறிக்கொள்ள விரும்புகிறேன், கைராபாத்தில் ஒரு இந்து மதத் தின் பெண்ணாவது கேலி செய் யப்பட்டால், கைராபாத்தின் முஸ் லிம் மருமகள்களை அவர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து பாலியல் வல்லுறவு செய்வேன்’’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான வீடியோ  காட்சிகள் சமூக வலைதளங்களி லும் வெளியானது. இது நாடு முழுவதும் கண்டனத்திற்கு உள் ளான நிலையில், ஐந்து நாட்க ளுக்கு மேலாகியும் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் கைது செய்யப் படவில்லை. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவும் உ.பி.  அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே 6 நாட்களுக்குப் பிறகு சாமியார் பஜ்ரங் முனி மீது தற்போது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.