states

img

ஹிஜாப், திருவிழா கடைகளை அடுத்து ஹலாலுக்கும் தடை!

முஸ்லிம்களுக்கு ஜம்மியத் உலமா சபை வேண்டுகோள் ரம்ஜானுக்கு இந்துக்களிடமும்  பொருட்களை வாங்குங்கள்!

கர்நாடகத்தில் சங்-பரிவாரங்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்து வரும் நிலையில், கர்நாடக ஜம்மியத் உலமா சபையோ, முஸ்லிம்கள், தங்களின் ரம்ஜான் பண்டிகைக்கு இந்து வியாபாரிகளிடமும் பொருட்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

“ஒரு முஸ்லிம் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களுக்கும் மரியாதை தர வேண்டும். எந்த மதத்தினருக்கும் நாம் கேடு நினைக்கக்கூடாது. நம்மை சுற்றி வசிக்கும் அனைத்து மதத்த வர்களின் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்தாக வேண்டும். முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் நல்ல விதமாக நடத்த வேண்டும். இதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்த பாடம். மத ரீதியாக ஏற்றத்தாழ்வு பார்க்காதீர்கள். அண்டை வீட்டார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். எனவே, மத வெறி யர்களின் சதித்திட்டத்தில் யாரும் விழுந்துவிட வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரு, ஏப்.2- பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகிய இந்துத்துவா கும்பல் நடத் தும் இந்த தாக்குதலில், அரசாங்கமும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறது.  முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணி வதற்கு அரசாங்கமே தலையிட்டு தடை  விதித்தது. கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைபோடக் கூடாது என்ற மிரட்டலையும் கண்டும் காணாமல் சென்றது. தற்போது ஹலால் இறைச்சிப் பிரச்சனையிலும் பஜ்ரங் தளத்திற்கு ஆதரவாகவே நிலை எடுத்துள்ளது. ஹலால் இறைச்சியை விற்பனை செய் யக்கூடாது என்று பஜ்ரங் தளம் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், கறிக்கடை களில் கால்நடைகள் முறையாக வெட்டப் படுகிறதா? என்பதை ஆய்வு செய்யுமாறு மாநில பாஜக அரசும், தன்பங்கிற்கு அதி காரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறது. இதனால் ஊக்கம்பெற்ற பஜ்ரங் தளம் கூட்டத்தினர், இஸ்லாமியர்கள் நடத்தி வரும் கடைகளில் இந்துக்கள் ஹலால் இறைச்சிகளை வாங்க வேண்டாம் என  துண்டறிக்கை வெளியிட்டு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். உகாதி பண்டிகைக்கு மறுநாள், அசை வம் சாப்பிடும் இந்துக்கள் கடவுளுக்கு இறைச்சியைப் படையல் செய்து புத் தாண்டைக் கொண்டாடுவார்கள். இதனை மனத்தில் வைத்துத்தான் பஜ்ரங் தளத்தி னர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், துண்டறிக்கையை வீதி வீதி யாகச் சென்று விநியோகம் செய்த அவர் கள், 2 இடங்களில் முஸ்லிம் இறைச்சி வியாபாரிகளைக் கடுமையாகத் தாக்கி யும் துன்புறுத்தியுள்ளனர். ஷிவமோகா மாவட்டம், பத்ராவதி யில் முஸ்லிம் இறைச்சி விற்பனையா ளர் ஒருவரைத் தாக்கிய அவர்கள், ஹொச மானே பகுதியில் தவுசிப் என்ற முஸ்லிம் வியாபாரியைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, பஜ்ரங் தளத் தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.