தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக வும், ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ள மகா ராஷ்டிராவின் தாராவி பகுதி மும்பையின் இதய மாகவும் வர்ணிக்கப்படுகிறது. காரணம் நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பை மாநகரை வடிவமைத்த தொழிலாளர்களில் பெருமளவி னர் தாராவியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில், அங்குள்ள குடிசைகளை ஒழித்து, மும்பை மாநக ரின் அடையாளத்துக்கு இணையாக தாராவி யை மாற்றப் போவதாக ஆட்சியாளர்கள் அடிக் கடி திட்டம் அறிவிப்பார்கள். ஆனால் ஆட்சி யாளர்களின் உள்நோக்கம் அறிந்த தாராவி மக்கள் குடிசை மாற்று திட்டத்திற்கு இதுவரை இடம்கொடுக்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் பாஜக கூட்டணி அரசு “குடிசை மாற்றுத் திட்டப்பணி” என்ற பெயரில் அங்குள்ள சுமார் 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள் ளது. இந்த அறிவிப்பால் சுமார் 600 ஏக்கர் பரப்பள வில், ஒன்றேகால் லட்சம் வீடுகளில் செறிந்தி ருக்கும் மக்கள் அங்கிருந்து படிப்படியாக அப்பு றப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. மேலும் தாராவியின் அடையாளத்தை மாற் றும் திட்டப்பணிகளை அதானி குழுமம் மேற் கொள்வதாகவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு என 47 ஏக்கரில் ரயில்வே இடம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளில் 80 சதவீதம் அதானி குழுமமும், 20 சதவீதம் மாநில அரசும் செலவிட இருக்கின்றன. மறுவளர்ச்சி திட்ட மதிப்பீடு என்ற பெயரில் ரூ.23 ஆயிரம் கோடிக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ரூ.12,500 கோடி முதலீட்டுடன் அதானி குழுமம் தாராவிக்குள் காலடி வைக்கி றது. தாராவி குடிசைப் பகுதிகளின் அடை யாளத்தை அகற்றும் முடிவுக்கும், மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு திட்டம் வழங்க ஒப்புதல் அளித்து இருப்பதாக வெளி யாகியுள்ள தகவலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.