புதுதில்லி,மார்ச் 16- அனைத்து வங்கி, நிதித்துறை அலுவலகங்களிலும் பெண் களுக்கு தனிக் கழிப்பறை வசதி செய்துதரப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்க டேசன் கோரிக்கையை ஏற்று ஒன்றிய நிதி இணையமைச்சர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 2022 பிப்ரவரி 8 அன்று மக்களவையில் விதி 377 அடிப்படையில் வங்கி மற்றும் இதர அலு வலகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப் பறை அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக் கையை எழுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளித்து நிதித் துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் காரத் எழுதியுள்ள கடிதத்தில் (D.O.F No 15/02/2022- Coord), இப் பிரச்ச னை மீது வங்கிகள் - நிதித் துறை நிறுவனங்கள் எல்லா வற்றிற்கும் அறிவுறுத்துவதாகவும், இது குறித்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி, எல்லா பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி அனுப்ப வேண்டுமென்று பணித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.