சண்டிகர், பிப்.19- ‘பஞ்சாப் முதல்வராகவோ அல்லது காலிஸ்தானின் பிரதமராகவோ நான் வரு வேன்’ என தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக குமார் விஸ்வாஸ் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கி ரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒரு வரை மாற்றி ஒருவர் கடும் விமர்சனங்களை வைத்தனர். அப்போது, பாஜக-வின் தகவல் தொழில் நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒரு வரும், அதன்பின் பாஜக-வில் இணைந்தவ ருமான குமார் விஸ்வாஸ் பேட்டி அடங்கிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். “ஒருநாள் நான் பஞ்சாப் முதல்வரா கவோ, அல்லது காலிஸ்தானின் பிரதமராக வருவேன்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தன்னி டம் கூறியதாக குமார் விஸ்வாஸ் அந்த வீடியோ வில் தெரிவித்திருந்தார். பாஜக-வினரும் இதனை சமூகவலைதளங்களில் பரப்பி னர்.
“பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத் தால் மிகவும் ஆபத்து” என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்தனர். “கெஜ்ரிவாலைப் போன்றோர், பஞ் சாப்பை பிரிக்கும் கனவை சுமந்து திரி கின்றனர். ஆட்சிக்காக அவர்கள் பிரிவினை வாதிகளுடன் கைகோர்க்கின்றனர். அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கு ஒரே சிந்தனைதான்” என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். நெருக்கடி அதிகரிக்கவே, “நான் தீவிர வாதிதான்... மக்களுக்காக பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டும் நான் ஓர் இனிமையான தீவிரவாதி” என்று கெஜ்ரிவால் கூற, “எதற்கு சுற்றி வளைக்கிறீர்கள்..? குமார் விஸ்வாஸ் சொல் வது உண்மையா, இல்லையா?” என்று நேரடி யாக பதில் சொல்லுங்கள் என்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்பங்கிற்கு பிடியை இறுக்கினார். இந்நிலையில், “காலிஸ்தான் ஆதரவு இயக்கமான தங்களுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக- தடை செய் யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (சீக் பார் ஜஸ்டிஸ்) அமைப்பு தனக்கு கடிதம் எழுதி யுள்ளது” என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதன் அடிப்படையில், “இதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறி வித்துள்ளார்.