states

அபுதாபியில் ஆளில்லா விமான கண்காட்சி இன்று துவக்கம்

அபுதாபி,பிப்.20- 26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமானக் கண்காட்சி-கருத்தரங்கம் ’ அபுதாபியில் இன்று தொடங்குகிறது. அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி,  கருத்தரங்கம் பிப்ரவரி 21 திங்கட்கிழமையன்று தொடங்குகிறது. 5-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 26 நாடுகளைச் சேர்ந்த 134-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் முதல் முறையாக இஸ்ரேல், செர்பியா, ஆஸ்திரியா, பல்கேரியா, மால்டா, துருக்கி மற்றும் பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. ஆளில்லா விமானம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள், நவீன உத்திகள், பாதுகாப்பு சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் கருத்தரங்கில் விவாதிக்கப்படும். இந்த கருத்தங்கில் 150-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.