19ம் நூற்றாண்டில் புரட்சிகரமான கருத்து களைத் துணிச்சலுடன் முன்வைத்த சிந்தனையாளர். சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்ற தலைவர், இதழாசிரியர், தமிழ் அறிஞர், சித்த மருத்துவர் என பன்முகங்களைக் கொண்ட பண்டிதர் அயோத்தி தாசர். அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப் பட்ட சிலையை டிச.1 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த செய்தி மகிழ்ச்சிகரமானது. ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’, ‘புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அவரின் ஆய்வு களும், அனுமானங்களும் கவனிக்கத் தக்கவை. புத்தம் குறித்தும், தமிழ் மக்களின் மேம்பாடு குறித்தும் தனது ‘தமிழன்’ இதழில் எழுதி பரப்பிய அவர், சாதி-மத பிற்போக்கு ஒழிக்கப்பட்ட சமத்து வத்திற்காக நின்ற முன்னோடி. இந்நாளில் அயோத்தி தாசரின் நினைவை போற்றிடுவோம்.