பிரதமர் ஆன பின்பு மோடி எந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் நடைபெற்றாலும் கண்டிப்பாக சிறப்பு திட்டங்களை அறிவித்து பிரச்சாரத்திற்கு சென்று விடுவார். அவர் தேர்தல் பிரச்சாரத்தை புறக் கணிக்காத மாநிலங்களே இல்லை என்ற நிலையில், பிரதமர் மோடி யின் தேர்தல் பிரச்சார வாழ்க்கை யில் பிரம்மாண்ட அடியைக் கொடுத் துள்ளது மிசோரம் மாநிலம். தற்போது நடைபெறவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அரசு விழாக்களை பிரச்சார நிகழ்வாக மாற்றி மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்திற்குள் பிரதமர் மோடி நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி அக்., 30 அன்று மிசோரம் மாநிலத்தின் மாமித் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தயா ராக இருந்தார். ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள மிசோ தேசிய முன்னணி தலைவரும், மிசோரம் மாநில முதல்வருமான சோரம் தங்கா மணிப்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இணைய மாட்டேன்; நான் தனியாகவே பிரச் சாரம் செய்வேன் என அதிரடியாக அறிவித்தார். பாஜக கூட்டணிக்குள் இருக்கும் முதல்வர் ஜோரம் தங்கா வின் இந்த அறிவிப்பால் கலக்கம டைந்த பிரதமர் மோடி தமக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி தேர்தல் பிரச் சாரத்தை புறக்கணித்து ஞாயி றன்று வீடியோ வெளியிட்டு சமா ளிப்பு பிரச்சாரம் செய்தார்.
மிசோரத்தில் பாஜகவுக்கு “0”
40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் செவ்வா யன்று (நவம்பர் 7) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஞாயிறன்று மிசோரம் மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், “லோக் போல்” நிறுவனம் இறுதி கட்ட கருத்து கணிப்பு முடிவு களை வெளியிட்டது. அதில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி 12 முதல் 14 இடங்க ளையும், காங்கிரஸ் கட்சி 12 முதல் 14 இடங்களையும், ஜோரம் மக்கள் இயக்கம் 10 முதல் 12 இடங்களையும், இதர கட்சிகள் 0 முதல் 3 இடங்கள் வரையில் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என “லோக் போல்” நிறுவனம் கூறியுள்ளது.
வீழ்கிறது பாஜக கூட்டணி ஆட்சி
மிசோரத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் ஆளும் மிசோ தேசிய முன்னணி பாஜக மீது கடும் அதிருப்தி யில் உள்ளது. இதனால் மிசோ தேசிய முன்னணி காங்கிரசுடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது. அதே போல மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சி யான ஜோரம் மக்கள் இயக்கம் தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள நிலையில், அக்கட்சி காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம். மணிப்பூர் பிரச்சனையால் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் மிசோ தேசிய முன்னணி - ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய இரு மாநில கட்சிகளும் கூட கைக்கோர்த்து ஆட்சி அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மிசோரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அகற்றப்படும் என்றும், ஒரு தொகுதி கூட பாஜகவிற்கு கிடைக்காது என்றும் வெளியான தகவலால் பாஜக கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.