திருவனந்தபுரம், அக்.18- கல்வித்துறையில் ஒத்துழைப்பது குறித்த விரிவான கலந்துரையாட லுக்காக பின்லாந்து நாட்டுக் குழு வினர் கேரளம் வந்துள்ளனர். அவர்களுக்கு பொதுக் கல்வி-வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தலைமையில் திருவனந்த புரம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்வித்துறையில் கேரளத்துட னான ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக, பின்லாந்து கல்வி அமைச்சர் அன்னா மஜா ஹென்டிக்சன், பின்லாந்து தூதர், பின்லாந்து தூதரக ஜெனரல் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு கேரளத்துக்கு வருகை தந்துள்ளது. இக்குழுவினர், முதல்வர் பினராயி விஜயன், பொதுக் கல்வி - வேலைவாய்ப்புத் துறை அமைச் சர், திட்டக் குழு துணைத் தலைவர், தலைமைச் செயலர், பொதுக் கல்வித் துறை முதன்மைச் செயலர், பொதுக் கல்வி இயக்குநர் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவர்களு டன் வியாழனன்று (அக்டோபர் 19) பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர். முன்னதாக தைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, எல்.பி.பள்ளி மற்றும் முன் தொடக்கப் பள்ளி (ப்ரீ ப்ரைமரி), காட்டன்ஹில் முன்-தொடக்க ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர். பொதுக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு அதிகாரமளித்தல், முன் தொடக்கக் கல்வி, தொழில் நுட்பம், கணிதம் கற்றல், மதிப்பீட்டு அணுகுமுறை, ஆராய்ச்சி அடிப்படை யிலான கற்றல் மற்றும் பணிக்குழுக் கள் ஆகியவை குறித்து கலந்துரை யாடினர். பல்வேறு பகுதிகள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதும், அதுகுறித்து ஒரு வரைபடத்தை தயாரிப்பதும் இந்த வருகையின் நோக்கமாகும். பின்லாந்துடனான ஒத்துழைப்பு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதும் இதன் ஒரு பகுதியாகும்.