புததில்லி, செப். 9 - புதுதில்லியில் ஜி-20 உச்சி மாநாடு துவங்கி நடை பெற்று வருகிறது. 40 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். ஜி-20 மாநாட்டிற்கு, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு உறுப்பு நாடு தலைமை ஏற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. வரு மாண்டு பிரேசில் தலைமை ஏற்க உள்ளது. ஆனால், ஜி-20 மாநாட்டிற்கு தலைமை ஏற்றதையே, மோடி அரசின் சாதனையாக மாற்ற முயன்றுள்ள பாஜக அரசு, கடந்த 2022 நவம்பர் முதலே தம்பட்டம் அடித்து வருகிறது. மாநாடு நெருங்கிய நிலையில், கடந்த வாரம் தலைநகர் தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ‘ஜி-20’ உச்சி மாநாடு நடைபெறும் மூன்று நாட்க ளும், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் என்டிஎம்சி வரம்புகளுக்குள் உள்ள தனித்தனி கடை களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. இது தில்லி மக்களுக்கு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் மருந்துகளைத் தவிர்த்து வெறெந்த ஆன்லைன் வர்த்தக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது என்பதால், உணவுச் சேவைகள் விநியோகம் உட்பட பல நடவ டிக்கைகள் முடங்கியுள்ளன. இந்த தொழில்களை நம்பி யுள்ள தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். உணவுச் சேவைகள், நுகர்பொருட்கள் மற்றும் என்டிஎம்சி மண்டலங்களுக்குள் அமைந்துள்ள மையங்க ளுக்குள் செயல்படுபவர்கள் உட்பட பல்வேறு துறை களை சேர்ந்த தொழிலாளர்கள் இதில் அடங்குவர்.
இவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 450 சம்பாதிக் கிறார்கள். இவ்வாறு வாழ்க்கை நடத்துவோரில் சில்லரை வியா பாரிகள், வர்த்தகர்கள் உள்பட 9 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளிகள் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். வர்த்தகர்களும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசின் கட்டுப்பாடுகளால், கன்னாட் பிளேஸ், ஜன்பத், கான் மார்க்கெட் மற்றும் மல்சா மார்க் போன்ற பகுதிக ளில் உள்ள பிரபலமான சந்தைகள் முடங்கியுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கவலை தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாள் மூடுதலின் போது மொத்தமாக இந்த சந்தைகள் சுமார் ரூ. 100 கோடி வர்த்தக நஷ்டத்தை சந்திக்கும் எனவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. தில்லியின் சில்லரை விற்பனைச் சந்தைகள் நாளொ ன்றுக்கு சராசரியாக ரூ. 500 கோடிக்கு வர்த்தகம் செய்கின்றன. இந்நிலையில், ‘ஜி20’ கெடுபிடிகள், தொழிற் துறைக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. மாதாந்திர சில்லறை விற்பனையில் வார இறுதி நாட்கள் 40 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன. அவ்வா றிருக்கையில், வார இறுதிநாட்களில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளால் தொழில்துறை கணிசமான நிதி இழப்பை சந்திப்பதாக, இந்திய ஆடை உற்பத்தியா ளர்கள் சங்கத்தின் (CMAI) தலைமை வழிகாட்டியான ராகுல் மேத்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாலையில் நடைபெறும் சில மணிநேர வர்த்தகம் தங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; அதுவும் திருவிழாக் காலம் துவங்கும் நேரத்தில் அந்த வர்த்தகத்தை இழக்க முடியாது; ஆனால், தற்போது வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் மேத்தா கவலை தெரிவித்துள்ளார்.