states

img

தில்லி: கொரோனா பாதிப்பில் 84 சதவிகிதம் ஒமைக்ரான்

தில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  351 பேர் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யேந்திர ஜெயின் ," கடந்த 2 நாட்களில் 84 சதவிகிதம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4000 பேருக்கு கெரோனா உறுதியாகும் என எதிர்ப்பு உள்ளது.  இதனால் தொற்று உறுதியாகும் விகிதம் 6.5சதவிகிதமாக அதிகரிக்கக் கூடும். தற்போதைய சூழலில் 202 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்றார்.