states

உயர்த்தியது 800 குறைத்தது 200

புதுதில்லி, ஆக. 29 -

       நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரி வாயு சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறி வித்துள்ளது.  

       ரக்சா பந்தன் பண்டிகை யை முன்னிட்டு நாடு முழு வதிலும் உள்ள பெண் களுக்காக, பிரதமர் மோடி இந்த விலை குறைப்பை பரி சாக அளித்துள்ளதாக ஒன் றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

     உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு கூடுதலாக ரூ. 200 மானியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

     2014-இல் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 417 ஆக இருந்தது. பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப் பட்டு தற்போது அதன் விலை  ரூ. ஆயிரத்து 118-ஐ எட்டி யுள்ளது. அதாவது கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக 800 ரூபாய் உயர்த்திய நரேந்திர மோடி அரசு தற்போது ரூ. 200 மட்டும் குறைத்துள் ளது.