states

img

மோடி அரசு நேரத்தை வீணடித்ததே மாணவர்களின் கஷ்டத்திற்கு காரணம்!

சிவசேனா எம்.பி.  பிரியங்கா சதுர்வேதி குற்றச்சாட்டு

மும்பை, மார்ச் 1- உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதில், மோடி அரசு அலட்சியத்துடன் நடந்து கொண்டதாகவும், 8 நாட்களாக எது வும் செய்யாமல், நேரத்தை வீண டித்ததாகவும் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:  உக்ரைனில் இருந்து இந்தி யர்களை மீட்பது தொடர்பாக பிர தமர் நரேந்திர மோடி அடிக்கடி உயர்மட்டக் குழு கூட்டம் நடத்து கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தியாவுக்கான முதல் விமானம் உக்ரைனில் இருந்து பிப்ரவரி 22-இல் தான் புறப்பட்டது. இந்திய மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரை ஒன்றிய அரசு நேரத்தை வீணடித்து விட்டது. இந்திய மாணவர்கள் உக்ரை னில் சிரமப்படுகின்றனர். உணவு, அடிப்படை வசதிகள் கிடைக்கா மல் அவதிப்படுகின்றனர். உக்ரை னின் எல்லை பகுதியில் பரி தவிக்கின்றனர். உக்ரைனில் அதி கரித்து வரும் மோசமான சூழலை மாணவர்கள் விவரித்து வரு கின்றனர். எனவே, உக்ரைன் விவ காரத்தில் முக்கிய நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். ஆனால், உண்மை பிரச்சனை களை மறைப்பதற்காக வாரிசு அர சியல், தேசப்பற்று என பாஜக வினர் பேசுகின்றனர். இவை இரண்டுக்கும் காப்புரிமை பெற் றதுபோல் பேசும் பாஜகவில் அர சியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லையா என்ன? இவ்வாறு பிரியங்கா சதுர் வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.