states

5 ஆண்டுகளில் 7.5 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர்!

புதுதில்லி, மே 8- கடந்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 50 ஆயி ரம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதொடர்பான புள்ளி விவரங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாநி லங்களவையில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், 7 லட்சத்து 49 ஆயிரத்து 765  இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்  ளனர். அதிகபட்சமாக 2019-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 17 இந்தியர்கள் தங்க ளின் குடியுரிமையைத் துறந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய 2020-ஆம் ஆண்டில் மட்டும் மிகக் குறைவாக 85 ஆயி ரத்து 248 இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்  துள்ளனர். 2021-ஆம் ஆண்டில் கூட 1 லட்சத்து 11 ஆயிரத்து 287 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் குடி யுரிமையை துறந்த இந்தியர்களில் 82 சதவிகி தம் பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 2017-ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 2 லட்சத்து 56 ஆயி ரம் இந்தியர்கள் குடியேறியுள்ளனர். அடுத்ததாக கனடாவில் சுமார் 91 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். 31 இந்தியர்கள் பாகிஸ்தானிலும், 2,174 இந்தி யர்கள் சீனாவிலும், 94 இந்தியர்கள் இலங்கை யிலும் குடியேறியுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 5 ஆயிரத்து 891 வெளி நாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கா னிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா  வந்த 3 ஆயிரத்து 117 இந்து, சீக்கியர், ஜைன மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் இதில் அடக்கம்.