states

img

சிபிஎம் கேரள மாநில மாநாட்டில் கட்சியே குடும்பம் என 7 இணையர்கள்

கொச்சி, மார்ச் 5- கொச்சியில் நடைபெற்ற சிபிஎம் மாநில  மாநாட்டு பிரதிநிதிகளில் கட்சியும் குடும்பமும் ஒன்றென வாழும் ஏழு இணையர்கள் பங்கேற்ற னர். மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களான இணையர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், அவரது  மனைவி திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.பிந்து, மத்தியக் குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தன் அவரது மனைவி கண்ணூர் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கே.ஷியாமளா, கோழிக்கோடு மாவட்டச் செயலர் பி.மோகனன், அவரது மனைவி மாவட்டச் செயலர் கே.கே.லத்திகா, மாநிலக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் மேத்யூ அவரது மனைவி கண்ணூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சுகன்யா,  மாநிலக் குழு உறுப்பினர் சி.எச்.குஞ்சம்பு அவரது மனைவி காசர்கோடு மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொல்லத்தை சேர்ந்த இரண்டு ஜோடிகள். மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.மெர்சிக்குட்டி அம்மா அவரது கணவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிதரகுருப். கொல்லம் மாநக ராட்சி மேயர் பிரசன்னா எர்னஸ்ட் அவரது கணவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எக்ஸ் எர்னஸ்ட் ஆகியோர் ஆவர்.

நாளைய தம்பதியர்

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்,  பாலுச்சேரி எம்எல்ஏ கே.எம்.சச்சின்தேவ் ஆகி யோர் மணமக்களாக உள்ளனர். கேரள மாநில மாநாட்டு பிரதிநிதிகளாக பங்கேற்ற இவர்களுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் எம்.ஏ.பேபி, ரோசா லக்சம்பர்க் குறித்த  சிவந்த ரோஜா மலர்’ புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.