புதுதில்லி, பிப்.15- அந்நியச் செலாவணி சந்தை யில் திங்கட்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டால ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 24 காசுகள் சரி வைச் சந்தித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தை முன் வைத்து, உலக நாடுகளிடையே அமெரிக்கா பதற்றத்தை அதிகரித்து வருவதால், முதலீட்டாளா்கள் பாது காப்பான முதலீட்டை நோக்கி படை யெடுக்கத் தொடங்கியுள்ளனா். இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான தேவை அதிகரித்துள் ளது. இது பங்குச் சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கி யுள்ளது. குறிப்பாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. இந்த உயர்வானது, இந்திய ரூபாயின் மதிப்பில் அதிக தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு இணை யான ரூபாயின் மதிப்பு 75 ரூபாய் 53 காசுகளாக இருந்தது. வர்த்த கத்தின் இடையே அதிகபட்சமாக 75 ரூபாய் 37 காசுகள் வரையிலும், குறைந்தபட்சமாக 75 ரூபாய் 64 காசு கள் வரையிலும் சென்றது. நிறை வாக வர்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு மேலும் 24 காசுகள் சரிந்து 75.60-இல் நிலை கொண்டது. இதன்மூலம் இந்திய ரூபாய் மதிப்பானது, திங்கட்கிழமையோடு தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி கண்டது. இந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் ரூபா யின் மதிப்பு 68 காசுகள் வீழ்ச்சி அடைந்தது.