புதுதில்லி,ஜன.16- அக்டோபர் மாதம் முதல் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கார்களில் பயணிக்க கூடியவர்களின் பாதுகாப்பு கருதி, 2019 ஆம் ஆண்டு ஓட்டுநர் இருக்கைக்கு முன்பு ஏர்பேக் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர், இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஓட்டுநர் அருகே முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவருக்கும் ஏர்பேக்கை கட்டாயமாக்கி, சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இச்சட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, ஒன்றிய மோட்டார் வாகன விதிகளில் (1989) திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளி யிட்டது. அதில், ‘8 இருக்கைகள் கொண்ட கார்களில் ஓட்டுநர், பக்கத்தில் அமர்ந்திப்போர், பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், 6 ஏர்பேக்குகள் பொரு த்துவது கட்டாயம்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் இந்தாண்டு அக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காடி டிவிட்டரில், ‘கூடுதல் ஏர்பேக் காரணமாக காரின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும்,’ என்று தெரிவித்துள்ளார்.