புதுதில்லி,பிப்.2- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்லப்போவதாக கூறிக்கொண்டு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் சிதைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. இந்த சீரழிவு நடவடிக்கைக்குப் பின்னர் 541 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும், அதில் பொதுமக்கள் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ‘சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு பயங்கரவாத தாக்குதல் அதி கரித்துள்ளதா?’ என்பது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்தார். அமைச்சர் தெரிவித்த தக வலின்படி, “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தினம் தொடங்கி இன்று வரை, அதாவது 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 26 ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் 541 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலின் போது 98 பொது மக்களும், 109 பாதுகாப்பு படை யினரும் உயிரிழந்தனர். இதே கால கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 439 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள னர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல்களில் பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதப்படுத்தப்பட வில்லை என்றும், தனிநபரின் சொத்துக்கள் தோராயமாக 5.3 கோடி ரூபாய் அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.