புதுதில்லி, மே 30 - 2021-22 நிதியாண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பதும், குறிப்பாக, புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுக்களின் புழக்கம் முன்பை விட 2 மடங்கு அதி கரித்திருப்பதும் ரிசர்வ் வங்கியின் ஆண்ட றிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2016 நவம்பர் 8 அன்று, அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பணமதிப்பு நீக்கம் செய்வ தாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கள்ளநோட்டு, கறுப்புப் பணம், தீவிர வாதத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறி வித்ததன் மூலம் கறுப்புப்பணம் வெளிப் பட்டு விடும். அல்லது வெளியே எடுத்தால் மாட்டிக் கொள்வோம் என்று பதுக்கல்காரர் கள் அதனை எடுக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்க லுக்கு ஏதுவாக இருப்பதால், ஊழல் செய் பவர்களுக்கு அது வசதியாகி விடுகிறது என்றும் பணமதிப்பு நீக்கத்திற்கு காரணம் கூறி னார். இவ்வாறு செய்வதன் மூலம் தீவிர வாதம் ஒழிந்து விடும் என்றார். மேலும் எளிதில் அச்சிடமுடியாத ரூபாய் நோட்டுக் களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தார்.
இந்த புதிய ரூபாய் நோட்டுக்களில் ஜிபிஎஸ் சிப் (GPS CHIP) இருப்பதால், அவை எங்கே பதுக்கப்பட்டிருந்தாலும் மோடி கண்டுபிடித்து விடுவார் என்று பாஜக-வினர் சிலர் பயமுறுத்தவெல்லாம் செய்தனர். ஆனால், பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்ட 500, 1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக் களில் 99.3 சதவிகிதம் வங்கிகளுக்கு வந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரி வித்தது. கறுப்புப்பணம் எதுவும் பிடிபட வில்லை. அடுத்ததாக, 500 ரூபாய், 2000 ரூபாய் வடிவிலான கள்ள நோட்டுக்கள் சில மாதங்களிலேயே தாராளமாக புழக்கத்திற்கு வந்தன. தீவிரவாதிகளிடம் கூட சர்வ சாதாரணமாக புதிய ரூபாய் நோட்டுக்கள் புழங்க ஆரம்பித்தன. மேலும், 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கலுக்கு வசதியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிய பிரதமர், அதிரடியாக 2000 ரூபாய் நோட்டை வெளி யிட்டு பதுக்கலுக்கான வசதியை இன்னும் அதிகப்படுத்தினார். அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளாக, நாட்டில் பிடிபடும் கள்ள ரூபாய் நோட்டுக் களில், பிரதமர் மோடியால் புதிதாக அறி முகப்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுக்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களே அதிகம் என்பதால், அதனை அச்சிடுவதையே ரிசர்வ் வங்கி அண்மையில் நிறுத்தி விட்டது. புழக்கத் தையும் வெகுவாக குறைத்து விட்டது. இந்நிலையில்தான், 2021-22 நிதியாண்டி லும் நாட்டில் கள்ளநோட்டுப் புழக்கம் குறைய வில்லை. மாறாக, முன்பை விட அதிகரித்துள் ளது. குறிப்பாக பிரதமர் மோடி அறிமுகப் படுத்திய புதிய 500 ரூபாய் கள்ளநோட்டு களின் புழக்கம் 2 மடங்கு அதிகரித்துவிட்ட தாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
“2021-ஆம் ஆண்டு வங்கிகளால் கண்டு பிடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டு களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 453 ஆக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்து அதாவது 101.9 சத விகிதம் உயர்ந்து 70 ஆயிரத்து 666 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது” என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், “2000 ரூபாய் கள்ள நோட்டுக்களும் 8 ஆயிரத்து 798 என்ற எண்ணிக்கையிலிருந்து 54 சதவிகிதம் உயர்ந்து 13 ஆயிரத்து 604 என்ற எண்ணிக்கை க்கு அதிகரித்துள்ளது” என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை யின்படி, 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை சில ஆண்டு களாக படிப்படியாகக் குறைந்து 214 கோடி ஆகி உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளில் அது 1.6 சதவிகிதம் மட்டுமே என்றாகியுள்ளது. மதிப்பின் அடிப்படையில், ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பில் 22.6 சதவிகிதத்தில் இருந்து மார்ச் 2021 இறுதி யில் 17.3 சதவிகிதமாகவும், மார்ச் 2022 இறுதியில் 13.8 சதவிகிதமாக குறைந்துள் ளது. அதேபோல, புழக்கத் தில் உள்ள ரூ. 500 மதிப் புள்ள நோட்டுகளின் எண் ணிக்கை, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 3,867. 90 கோடியிலிருந்து 4,554.68 கோடியாக உயர்ந்துள்ளது. தொகுதி அடிப்படையில், ரூ. 500 மதிப்பிலான நோட்டுகள் 34.9 சதவிகிதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து ரூபாய் 10 மதிப்புள்ள வங்கி நோட்டு கள், மார்ச் 31, 2022 வரை புழக் கத்தில் உள்ள மொத்த வங்கி நோட்டுகளில் 21.3 சதவிகித மாக இருந்தன” என்றும் ரிசர்வ் வங்கியின் 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கை தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட் டுகளின் மொத்த எண் ணிக்கை 2022 மார்ச் நிலவரப் படி ரூபாய் 13,053 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண் டில் ரூபாய் 12,437 கோடியாக இருந்தது.