50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாத காலமாக ஊதியம் இல்லை
மத்தியப்பிரதேச பாஜக அரசு ரூ.230 கோடி மோசடி
பாஜக ஆளும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் முத லமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். பிரதமர் மோடி - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விருப்பப்படியே மத்தியப்பிரதேச மாநில நிர்வா கத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோகன் யாதவ் அரசு 50,000 அரசு ஊழியர் களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாமல் ரூ.230 கோடியை சுருட்டியுள்ள சம்பவம் வெளிச்சத் திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக கருவூல மற்றும் கணக்கு ஆணை யம்,”50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப் படவில்லை. இது மாநிலத்தின் அர சுப் பணிக்குழுவின் 9% ஆகும். அரசு ஆவணங்களில் 50,000 ஊழியர் களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவை கூட இருக்கிறது. ஆனால், ஏன் அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியம் (ரூ.230 கோடி) வழங்கப்பட வில்லை?” என கடிதம் மூலம் மத்தி யப்பிரதேச ஆட்சி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது. ரூ.230 கோடி சுவாஹா 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக சம்பளம் வழங்கா மல் இருக்கும் மத்தியப்பிரதேச பாஜக அரசின் செயல்பாடு பல் வேறு சந்தேகங்களைக் கிளப்பி யுள்ளது. ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில் 40,000 பேர் நிரந்தர ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள் ளனர். நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், சம்பளம் பெறாத 50,000 ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல் லது இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளார்களா? அல்லது பொய்யான பிரிவில் பணியாற்றுகிறார்களா? என சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும் 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9% ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ.230 கோடி முறைகேடு நடப்பது அரசு தெரியா மல் அனுமதிக்கப்பட்டு வருகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நெருக்கடி காரணமாகவே கடிதம் 6 மாத காலம் சம்பளம் வழங்கா ததன் காரணமாக 7,000க்கும் மேற் பட்ட ஊழியர்கள் மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதனால் கருவூல மற்றும் கணக்கு ஆணை யம் மே 23 ஆம் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிலளிக்கு மாறு சுமார் 6,000 துறை அதிகாரி களுக்கு கடிதம் அனுப்பியது. ஆனாலும் இந்த கடிதம் தொடர்பாக மத்தியப்பிரதேச பாஜக அரசு எந்த விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.