states

img

விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
வியட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் 2 பேர்  தில்லி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ; பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, இல்லையா? என்பதை பாலிஸ்டிக்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தும். முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் செயல்படும், பயன்படுத்த முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.