புதுதில்லி, டிச. 2 - அண்மையில் 5 மாநி லங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலை யில், அதில் 4 மாநிலங்களுக் கான வாக்கு எண்ணிக்கை ஞாயிறன்று நடைபெறு கிறது. மிசோரத்தில் மொத்த முள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நவம்பர் 7 அன்று தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகு திகள் மற்றும் மத்திய பிர தேசத்தின் 230 தொகுதி களுக்கு நவம்பர் 17 அன்று வாக்குப் பதிவு நடை பெற்றது. ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25 அன்றும், தெலுங்கானா வில் 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30 அன்றும் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஐந்து மாநிலங்களிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்ற நிலையில், மிசோ ரத்தில் 77.04 சதவிகிதம், சத்தீஸ்கரில் 76.31 சதவிகி தம், மத்தியப் பிரதேசத்தில் 76.22 சதவிகிதம், ராஜஸ் தானில் 73.92 சதவிகிதம், தெலுங்கானாவில் 70.60 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழ மை (டிசம்பர் 3) எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் படவுள்ளன. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மாநில மக்க ளின் வேண்டுகோளை ஏற்று, வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமைக்கு (டிசம்பர் 4) மாற்றப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் காங்கிரஸ் வசமும், மத்தியப்பிரதேசம் பாஜக வசமும், தெலுங் கானா பாரத் ராஷ்டிர சமிதி கட்சி வசமும் உள்ள மாநி லங்கள் ஆகும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி தற்போது ஆட்சியில் உள்ளது.