திருவனந்தபுரம், மார்ச் 26- கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளில் 3000 ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார். புதிய ஸ்டார்ட்அப்கள் மூலம் 35,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 2026-க்குள் 15,000 ஸ்டார்ட்அப்கள் மற்றும் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளது. கேரளாவில் உள்ள படித்த இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதா ரத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல ஸ்டார்ட் அப் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்றார். மாநிலத்தில் இன்கு பேட்டர்களின் (தொடக்க நிலை தொழில்கள்) எண்ணிக்கையை அதிகரிப்பது, கருத்து மேம் பாட்டிலிருந்து அதிக நிதி வழங்குதல் மற்றும் வழிகாட்டல் திட்டங்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஸ்டார்ட்அப் களுக்கு சிறந்த ஆதரவை அரசாங்கம் உறுதி செய்கிறது.
முதலீடு கிடைக்கச் செய்வதிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப்களில் முதலீடு 2016 இல் சுமார் 50 கோடி ரூபாயில் இருந்து இன்று 3200 கோடி ரூபா யாக அதிகரித்துள்ளது. கேரளா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் 341 புத்தாக்க மற்றும் தொழில்முனைவு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் ஒன்றிய, மாநில அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்ற நெட்வொர்க் நிறுவப்பட்டுள்ளது. பொறி யியல் கல்லூரிகள், பாலி டெக்னிக்குகள், ஐடிஐகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் சிறிய தொழில் துறை அலகுகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்து டன் ஸ்டார்ட்-அப்களை அமைக்கலாம். அதற்கு தேவையான வசதிகளுடன், மாணவர்கள் உற்பத்தியுடன் கூடிய பயிற்சியில் பங்கேற்க வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் அவர்களின் படிப்புடன் வருமானமும் ஈட்ட வும். முன்னாள் மாணவர்கள் உட்பட இந்த முயற்சிகளில் ஈடுபடலாம். கேரளாவின் 14 மாவட்டங்களிலும் இதுபோன்ற மையங் களை அமைக்க முன்னோடித் திட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் திறன் சுற்றுச்சூழல் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக உயர் கல்வி நிறுவனங்களில் திறன் படிப்பு களைப் பெறுவதை அரசாங்கம் ஊக்கு விக்கும். கல்வி நிறுவனங்களுடன் இணைக் கப்பட்ட உற்பத்தி வசதிகளை மேம்படுத்து வதற்கு இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தில் உள்ள 140 சட்ட மன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு நிறுவனம் என்ற வரிசையில் செயல்படுத்தப் படும். அறிவுப் பொருளாதார இயக்கத்துடன் இணைந்து கே-டிஸ்க் இன் உதவியுடன், படிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், உட்கட்டமைப்பை ஏற்படுத்த உதவும். இதற் காக கிப்பியில் இருந்து 140 கோடி ரூபாய் வழங்கப்படும். அறிவுப் பொருளாதாரத்தில் கேரளாவின் பாய்ச்சலுக்கு இத்தகைய தலை யீடுகள் நிச்சயம் வலு சேர்க்கும்.