1945-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி தோழர் கோதாவரி பருலேகர் தலைமையில் நடந்த வார்லி ஆதிவாசி கிளர்ச்சியின் போது பழங்குடி மக்கள் 5 பேர் பிரிட்டிஷ் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான 78-ஆவது தியாகிகள் தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் , விவசாயிகள் சங்கம், சிஐடியு, மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்க தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் தஹானு தாலுகாவில் உள்ள சரோட்டியில் மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் அனுசரிக்கப்பட்டது. இதில் 30,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.