ஒரே வாரத்தில் 3 பாஜக எம்எல்ஏக்களுக்கு சிறை
புதுதில்லி உலகின் மிகப்பெரிய கட்சி நாங்கள் தான் என பாஜக கூறிக் கொண்டா லும், அக்கட்சி குற்றச்சம்பவங்க ளின் கூடாரம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். காரணம் மோசடி, கடத்தல், திருட்டு, பாலியல் குற்றம் என அனைத்து சம்பவங்களிலும் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மே மூன்றாம் வாரத்தில், அதாவது ஒரே வாரத்தில் குற்றச்சம்ப வங்களில் ஈடுபட்ட 3 பாஜக எம்எல்ஏக் கள் அடுத்தடுத்து சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பாஜக எம்எல்ஏ 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தனது பதவியையும் இழந்துள்ளார்.
1. கன்வர் லால் மீனா (ராஜஸ்தான்) :
ராஜஸ்தான் மாநிலம் அண்டா தொ குதி எம்எல்ஏ வாக இருந்தவர் கன்வர் லால் மீனா. இவர் துணை மாவட்ட ஆட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டியதற்காக அக்லேரா நீதிமன்றம் 2020, டிசம்பர் 14ஆம்தேதி லால் மீனா வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.தனது தண்ட னையை நிறுத்தி வைக்கக் கோரி மீனா உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். உச்சநீதி மன்றம் அவரது மனுவை நிராகரித்து, இரண்டு வாரங்க ளுக்குள் சரணடைய உத்தர விட்டது. இதனால் மே 21ஆம் தேதி அன்று அக்லேரா நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் சாசனம் மற்றும் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு எம்எல்ஏ 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள். அதன்படி கன்வர் லால் மீனா அண்டா தொ குதி எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை ராஜஸ்தான் சபாநாய கர் அறிக்கை மூலம் அறிவித்து விட்டார்.
2. மிஸ்ரி லால் யாதவ் (பீகார்) :
பீகார் மாநிலம் தர்பங்காவில் 2019ஆம் ஆண்டு நடந்த தாக் குதல் வழக்கு தொடர்பாக (உமேஷ் மிஸ்ரா என்பவர் படுகா யம்) 2025 பிப்ர வரி மாதம் சிறப்பு எம்பி/ எம்எல்ஏ நீதிமன்றம் அலிநகர் பாஜக எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ் மற்றும் அவரது கூட்டாளி க்கு 3 மாத சிறை தண்டனை, ரூ. 00 அபராதம் விதித்தது. இதனை எதிர் த்து தர்பங்கா நீதிமன்றத்தில் எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக தர்பங்கா நீதிமன்றம் மே 22ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் பாஜக எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ் மற்றும் அவரது கூட்டாளியை நீதி மன்றக் காவலில் வைக்க உத்தர விட்டது.
3. ஆதேஷ் சவுகான் (உத்தரகண்ட்) :
உத்தரகண்ட் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு கங்னஹார் காவல் நிலையத்தில் உற வினர் ஒருவரை, பொய்யான வரதட்சணை துன்புறுத்தல் வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைத்ததற்காக ராணிப்பூர் சட்ட மன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ ஆதேஷ் சவு கான், அவரது மருமகள் தீபிகா சிங் ஆகியோ ருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் திங்கள்கிழமை 6 மாத சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மிக தாமதமாவதால், ஆதேஷ் சவுகான் மற்றும் அவரது மருமகள் தீபிகா சிங் சிறைக்குச் செல்ல உள்ளனர்.