புதுதில்லி, டிச.23- நாடு முழுவதும் ஒமைக் ரான் கொரோனா தொற்றால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வியாழனன்று காலை வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, தில்லியில் 64 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிர தேசம் 2, ஆந்திரம் 2, சண்டிகர், லடாக், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய் யப்பட்டுள்ளது. டிச.23-ஆம் தேதி காலை வரை தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள் ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் ஆயுதமாக உலகம் முழு வதும் முழு வீச்சில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஜனவரி 16, 2020 முதல் பல கட்டங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 139.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மக்கள் பங்கேற்பு மற்றும் சுகா தாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு டன் கூடிய முயற்சியால், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.