குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இதில் 241 பேர் விமானத்தில் பயணித்தவர்கள். 29 பேர் விமானம் விழுந்த இடமான மேகானி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், தற்போது டிஎன்ஏ சோதனை மூலம் உடல்கள் உறவினர்க ளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று மாலை நிலவரப்படி 211 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இது வரை 189 உடல்கள் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.