states

மாநிலங்களிடம் 18.14 கோடி தடுப்பூசிகள்

புதுதில்லி, ஜன.7- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களி டம் 18.14 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ள தாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 149.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி உற்பத்தி யை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்க ளிடம் ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவ னங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.  தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒன்றிய அரசின் தொகுப்பி லிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 154 கோடியே 32 லட்சத்து 62 ஆயி ரத்து 955 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 18 கோடியே 14 லட்சத்து 28 ஆயிரத்து 316 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. விரைவில் இந்தியாவில் உள்ள மாநிலங்க ளுக்கு கூடுதல் தடுப்பூசி அனுப்பப்பட உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.