states

img

வெள்ளத்தில் மிதக்கும் திரிபுரா மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாமல் திணறும் பாஜக அரசு

அகர்தலா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான கோமதியில் 22.3 மீட்டர் உய ரத்தில் வெள்ளம் கடைபுரண்டோடி வரும் நிலையில், மற்ற சிறிய ஆறுக ளிலும் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் பாய்ந்து வருகிறது. இதனால் தலைநகர் அகர்தலா உள்ளிட்ட 8 மாவட்டங்களும் கனமழை வெள்ளத்தால் முற்றிலும் இயல்பு நிலையை இழந்துள்ளன. மாநிலம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி, நிலச்சரிவில் சிக்கி 24 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், 17 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

களத்தில் இடதுசாரிகள் 

திரிபுரா மாநிலத்தின் 70% பகுதி கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலை கள், பாலங்கள் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், வெள்ள மீட்புப் பணியை மேற்கொள்ள முடியா மல் ஆளும் பாஜக அரசு திக்கி திணறி வருகிறது. திரிபுரா பாஜக முதல்வர் மாணிக் சாஹா பிரதமர் மோடி ஸ்டை லில் ஹெலிகாப்டர் மூலமே வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டு வருகிறார். அதே போல மீட்புப் பணியில் ஈடுபடா மல் ஆளும் பாஜகவினர் தலைமறை வாக உள்ளது போல இருக்கின்றனர்.

மாநில அரசின் உயரதிகாரி ஒருவர், மாநிலம் முழுவதும் 17 லட்சம் பேர்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா கவும், அவர்களில் 65,500 பேர் மட்டுமே மீட்கப்பட்டு 450 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். அப்படி என்றால் மீதமுள்ள 16 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் நிலை என்ன ஆனது. உணவின்றி தவித்து வரும் 16 லட்சம் மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக திரிபுரா பாஜக அரசு இன்னும் வார்த்தை கூட கூறவில்லை. 

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் மாணவர் சங்க ஊழி யர்கள் வெள்ள மீட்புப் பணியில் கம்பீர மாக இறங்கி பொதுமக்களை மீட்டு  வருகின்றனர். மேலும் பாஜக அரசைப் போல் அல்லாமல் தங்களது சொந்த பணத்தில் ஆங்காங்கே நிவாரண முகாம்களை உருவாக்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

ரூ.40 கோடி அறிவிப்பு வந்துவிட்டது... காசு எப்ப வரும்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திரிபுரா மாநிலத்திற்கு நிவார ணம் வழங்க ரூ.40 கோடி ஒதுக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததாக திரிபுரா பாஜக முதல்வர் மாணிக் சாஹா வெள்ளியன்று கூறினார். மோடி அரசு வெள்ள நிவாரணம், இழப்பீடு தொகை போன்றவற்றின் அறிவிப்பு மின்னல் வேகமாக  இருக்கும். ஆனால் அறிவிப்பு வேகத்தைப் போன்று மோடி அரசின் வெள்ள நிவாரணம், இழப்பீடு தொகை மாநிலங்களுக்கு உடனடியாக கிடைக்காது. அது வெறும் அறிவிப்பாகவே இருக்கும்.

இது நாடறிந்த விஷயம் என்ற நிலையில், திரிபுரா மாநிலத்திற்கு ரூ.40 கோடி வெள்ள நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக மோடி அரசு  அறிவித்துள்ளது. ஆனால் காசு எப்பொழுது வரும் என்று தான் தெரிய வில்லை. திரிபுராவில் அடுத்து 2027இல் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், ரூ.40 கோடியை 4 தவணையாகக் கூடமோடி அரசு அளிக்கலாம்.