states

img

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது பாஜக தாக்குதல்

புதுதில்லி, மார்ச் 11- திரிபுராவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற சிபிஐ(எம்) மாநிலங்களவைத் தலைவர் எளமரம் கரீம் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது  பாஜகவினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தி னர். ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டபடி வந்த  30 பேர் கொண்ட பாஜக கும்பல் எம்பிக்கள் வந்த  காரை தீ வைத்து எரித்தனர். காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மற்ற இரண்டு கார்களை அடித்து நொறுக்கினர்.  இந்த வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.பி.க்கள் குழு மார்ச் 2 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவு கள் அறிவிக்கப்பட்ட பின்னர் திரிபுராவில் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மீது முன் எப்போதும் இல்லாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அவற்றை பார்வை யிட ஏழு பேர் கொண்ட எம்.பி. குழு இரண்டு நாள்  பயணமாக மாநிலத்திற்கு வந்தது.சிபிஐ-எம் பிரதிநிதிகளாக  எளமரம் கரீம், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, பி.ஆர்.நடராஜன், ஏ.ஏ.ரஹீம், சிபிஐ பிரதிநிதி பினோய் விஸ்வம், காங்கிரஸ் பிரதிநிதிகளாக ரஞ்சிதா ராஜ்ஜன், அப்துல் கலீக்  ஆகியோர் குழுவில் உள்ளனர்.

சட்டத்தின் ஆட்சியும், காவல் துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்த திரிபுராவில், எதிர்க்கட்சியினர் மீது பத்து நாட்களில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள் ளன. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பலத்த காயம் அடைந்தனர். சுமார் 700 வீடுகள் எரிந்து நாசமாகின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள், தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், பாஜக அரசு யாரையும் கைது செய்யவில்லை. மேலும் இடது முன்னணி - காங்கிரஸ் கட்சி களை ஆதரித்த வாக்காளர்கள் மீதும் அவர் களது சொத்துக்களையும் பாஜக குண்டர்கள் சேதப்படுத்தி திரிபுரா மாநிலத்தையே வன் முறைக் களமாக மாற்றி வருகின்றனர். கடந்த  9 நாட்களாக வன்முறை தொடர்ந்து அரங்கேறி யும் வரும் நிலையில், வன்முறை சம்பவங்களில்  3 உயிர்கள் பறிபோயுள்ளன. பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள், தோட் டங்கள் கருகியுள்ளன. பலர் காயத்துடனும், வீடு களை, சொத்துக்களை இழந்தும் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். அரசும் காவல்துறையும் தாக்கியவர் களுக்கு உடந்தையாக இருந்ததையடுத்து உண்மையைக் கண்டறிய எம்.பி.க்கள் குழு மாநிலத்துக்கு வந்தது. 

இக்குழுவில் ஒரு பகுதியினர், மேற்கு திரிபுரா மாவட்டம் பிஷால்கரில் உள்ள நெஹல் சந்திர நகரில் பாஜகவினரால் தீ வைத்து எரிக்கப் பட்ட காங்கிரஸ் தொண்டரின் கடையை பார்வை யிட  வெள்ளியன்று (மார்ச் 10) இரவு 8 மணியள வில் நெஹல் சந்திரநகருக்கு சென்றது. இக்குழு வில் எளமரம் கரீம் எம்.பி, காங்கிரஸ் எம்பி அப்துல் கலீக், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், முன்  னாள் எம்பியுமான அஜோய் குமார், பிரதாப்கர்  எம்எல்ஏ ராமுதாஸ், மாநில காங்கிரஸ் கட்சி  தலைவர் பிரிஜித் சின்ஹா ஆகியோர் இருந்தனர். இந்த எம்.பி.க்கள் சென்ற வாகனத்தை பாஜக  குண்டர்கள் மறித்து “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பியபடி தாக்குதல் நடத்தினர். திரிபுரா போலீசார் கண்டு கொள்ளாமல் இருக்க எம்பிக்கள் குழுவோடு வந்த பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் மிகுந்த முயற்சியுடன் எம்.பி.க்களை மீட்டனர்.

உயிர்தப்பிய எம்எல்ஏ

எம்பிக்கள் குழுவோடு சென்ற காங்கிரஸ்  எம்எல்ஏ கோபால் ராயின் வாகனம் தனியாக  சிக்கிக் கொண்டது. பாஜக குண்டர்கள் தடுத்து நிறுத்தி கற்கள், கம்பிகளால் வாகனத்தை சேதப்படுத்தினர். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தும் முன்னரே நல்வாய்ப்பாக காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் ராய் காரில் இருந்து இறங்கி  ஓடியதால் உயிர் தப்பினார். கல்வீச்சு கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இடது முன்னணி - காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களுடன் எம்பிக்கள் குழு உரையாடிய போது பாஜக கும்பல் கற்களை வீசத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பியபடி எம்பிக்களை பாஜக குண்டர்கள் நேரடியாக தாக்க முயற்சித்தனர்.

போலீசார் ஆதரவுடன் தாக்குதல் நடத்திய பாஜக குண்டர்கள்

அடையாளம் தெரியாத ‘மர்ம நபர்கள்’  தாக்கியதாக போலீசார் கூறினர். எம்பிக்கள் குழுவில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக்,” எங்களை தாக்கியவர்கள் பாஜக கட்சியி னர்தான். அவர்களே பாஜக என்று கூறித்தான் கற்களை வீசினர். ஆனால் போலீசார்  மர்ம  நபர்கள் என கூறுகின்றனர். நாங்கள் வந்த 4 வாக னங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால் போலீ சார் எதுவும் செய்யவில்லை. திரிபுராவில் சட்டத்  தின் ஆட்சி இல்லை என்பதை வெளிப்படை யாக காணமுடிகிறது” எனக் கூறினார்.

எவ்வித நடவடிக்கையும் இல்லை

தாக்குதல் சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகி யும் திரிபுரா போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆய்வா ளர் ஜெனரல் (ஏஐஜி) ஜோதிஷ்மன் தாஸ் சவுத்ரி பெயரளவில் கூறினார். ஆனால் அவர் யார்?  எந்த கட்சியைச் சேர்ந்தவர்? வழக்குப் பதிவு  செய்யப்பட்டதா? அவர் எந்த காவல் சிறையில்  உள்ளார்? என்பதைக் கூறவில்லை.

சிபிஎம் தலைவர் வாக்குமூலம்

சிபிஐ(எம்) எம்பி எளமரம் கரீம் மற்றும் காங்கி ரஸ் எம்பி அப்துல் காலிக், காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் குமார் ஆகியோர் அடங்  கிய குழு நெஹல்சந்திரநகர் சந்தையில் இறங்கியவுடன் அவர்கள் மீது “பாரத் மாதா கி ஜெய்” கோஷங்களை எழுப்பி பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். நாங்கள் வந்த வாகனம் கடுமையாக சேதம டைந்தது. பின்னால் வந்த 2 வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. உடனடியாக இறங்கியதால் அவர்கள் உயிர்தப்பினர்” என்று சிபிஐ(எம்) மூத்த தலைவர் ரகல் மஜூம்தர் கூறினார்.

காங்கிரஸ் கண்டனம்

“திரிபுராவில் வன்முறையால் பாதிக்கப் பட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்ற இடது முன்னணி - காங்கிரஸ் எம்பிக்கள் குழு  மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கி றோம். போலீசார் வாய்மூடி பார்வையா ளர்களாக உள்ளனர். பாஜக குண்டர்களை  கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டோம். அவர் களின் ஜனநாயகமற்ற, கோழைத்தனமான நடத்தைக்கு எதிராக நாங்கள் எப்போதும் எழுந்து நிற்போம்” என காங்கிரஸ் பொதுச்  செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்ட னம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் பயங்கரவாதச் சூழலை உரு வாக்கிய பாஜகவினர், தலைவர்களைக் குறி வைத்து திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்ட னர். மோகன்பூரிலும் எம்பிக்கள் குழுவின் வாகனம் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது.

மாணிக் சர்க்கார் தலைமையிலான குழு

இதனிடையே, முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான மாணிக்  சர்க்கார் தலைமையில் கோயம்புத்தூர் நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ  நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம்,  மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பபித்ராகர் ஆகியோர் கொண்ட குழு துர்காபரி தேயிலை  எஸ்டேட், சர்மா பாரா, காந்திகிராம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக குண்டர்களின் தாக்குத லுக்கு உள்ளான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் வீடுகளை பார்வையிட்டனர். காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இக்குழு சனிக்கிழமையன்று திரிபுரா ஆளுநரை சந்தித்து அறிக்கை சமர்ப்பித்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியது. ஒன்றிய அரசிடமும் வன்முறை தொடர்பான அறிக்கை யை சமர்ப்பிக்கும். எம்பிக்களுக்கு எதிரான  தக்குதலை அடுத்து, எம்.பி.க்கள் குழு சனிக்  கிழமை நடைபெறவிருந்த பயணத்தை ஒத்தி வைத்தது.