உதய்பூர், ஜூலை 12 - நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா கடும் கண்டனத்திற்கு உள்ளானார். இந்தியா வில் மட்டுமன்றி சர்வதேச அளவில் அவர் எதிர்ப்பைச் சந்தித்தார். அதேநேரம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதி யில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால், நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத் தளத்தில் கருத்துப் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முகம்மது ரியாஸ் மற்றும் கவுஸ் முகம்மது ஆகிய இரண்டு பேர், கடந்த ஜூலை 28-ஆம் தேதி கன்னையால் லால் கடைக்கே சென்று அவரை கொடூரமாக கழுத் தறுத்து கொலை செய்தனர். மேலும் இந்த சம்ப வத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்ட நபர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரியாஸ் என்பவர் பாஜக தலைவர் கள் சிலருடன் இருப்பது போன்ற புகைப்படங் கள் பரபரப்பை ஏற்படுத்தின.
ரியாஸ் பாஜக சார்பில் நடக்கும் நிகழ்ச்சி களில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டு வந்துள்ளார். மேலும், பாஜக சிறு பான்மை அணி நிர்வாகி தாஹிருடன் நெருங்கிய தொடர்பிலும் அவர் இருந்துள்ளார். ராஜஸ்தான் எதிர்க்கட்சித்தலைவர் குலாப் சந்த் கடாரியாவுட னும் ரியாஸ் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஆனால், இது பற்றி பாஜக பெரிதாக வாய் திறக்காமல் நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், கன்னையாலால் கொலைக்குற்றவாளி ரியாஸூடன் இருக்கும் தொடர்பு குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். “உதய்பூர் கொலையுடன் தொடர்புடைய குற்ற வாளிக்கு பாஜக-வுடன் தொடர்பு இருப்பது அனை வருக்கும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத் தில் வாடகைக்கு இருந்ததை கண்டறிந்துள்ளோம். கன்னையா லாலை கொலை செய்த நபர்கள் வாடகை செலுத்தாமல் இருந்ததாகவும் இதற் காக போலீஸ் நிலையத்தில் சென்று முறையிட்ட போது, பாஜகவினர் தன்னை தொடர்பு கொண்டு எங்கள் கட்சிக்காரரை தொந்தரவு செய்யக் கூடாது என மிரட்டியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் பாஜக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.