ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் டபொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் 3.6 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 3.1 விழுக்காடு எதிரிமறை வளர்ச்சியைச் சந்தித்த ஜாம்பியா, தகவல் துறையின் வளர்ச்சிதான் இத்ற்குக் காரணம் என்று அந்நாட்டின் புள்ளிவிபரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமானத்துறையும் ஓரளவு வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்தோனேசியா மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளுடன் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியில் வெனிசுலா இறங்கியுள்ளது. எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் மற்றும் இறக்குமதி செய்வதற்கு உகந்த பொருட்கள் ஆகியவற்றின் பட்டியலுடன் இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வெனிசுலாவின் தொழிற்துறை அமைச்சர் சீசர் பசந்தா சந்தித்து விளக்கிக் கூறியுள்ளார்.
பணியிடங்களில் பாதுகாப்பு பற்றிய சிறப்பு கவனத்தை சீன அரசு மேற்கொண்டுள்ளது. அண்மையில் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதை சுட்டிக்காட்டி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆணையிட்டிருந்தார். அதோடு, அமைச்சரவை, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உள்ளிட்ட பல்வேறு உயர்மட்டக்கூட்டங்களில் அவரும் பங்கேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.