states

ஆருத்ரா நிறுவனத்தில் ரூ.7 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை

காஞ்சிபுரம், ஜூலை 21- ஆருத்ரா நிறுவனத்தில் ரூ. 7 லட்சம் பணத்தை இழந்த காஞ்சி புரம் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட் பட்ட காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜு (36).இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 6 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. ராஜீ தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டிங் தொழிலையும் செய்து வந்தார். தனது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் பெற்று ஆருத்ரா,  மற்றும் ஐ எப் எஸ் நிதி நிறுவனங்க ளில் ரூ. 7 லட்சம் வரை பணம் கட்டி யுள்ளார். இந்த நிறுவனங்கள் மோசடி யில் ஈடுபட்ட வழக்கில் சிக்கியதை அடுத்து ராஜீ பணத்தை இழந்து தவித்தார். இதற்கிடையே பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியும் அதிகரித்தது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். நீண்ட நேரமாகி யும் வெளியே வரவில்லை. அவரது பெரியம்மா நீலா கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று  பார்த்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது  குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள னர். ஆருத்ரா, ஐஎப்எஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பலர் மன உளைச் சலில் தவித்து வரும் நிலையில் இது  போன்று மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் பணத்தை  இழந்தவர்களுக்கு அதை திருப்பி கொடுக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப் பட்டவர்களின் குரலாக உள்ளது.