மதுரை, ஜூன் 3- மதுரை மாநகராட்சி பாதாளச் சாக்கடை தோண்டும் பணியில் ஈடு பட்டிருந்த தொழிலாளி ஒருவர் பொக்லைன் இயந்திரத்தின் துடுப்பில் சிக்கி கழுத்து துண்டாகி கோரமாக பலியானார். ஈரோடு மாவட்டம் அமராவதி நகரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் வீரணன் (எ) சதீஷ் (34). இவ ருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும். பூஜா என்ற மகளும், அஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். வீரணன் (ஜூன் 3) வெள்ளிக்கிழமை யன்று மாலை மூன்று மணியளவில் புதுவிளாங்குடி ராமமூர்த்தி நகரில் சுமார் 15 அடி ஆழத்தில் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து, அதில் அவர் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொக்லைன் ஓட்டுநர் , மண்ணை அகற்றி வீரணனை காப்பாற்ற முயற்சி த்துள்ளார்.
பொக்லைன் மூலம் மண்ணை அள்ளிய போது பொக்லைன் துடுப்பில் வீரணனின் கழுத்து தனியாக வெளியே வந்தது. இதில் கழுத்து வேறு உடல் வேறாக பிரிந்து வீரணன் பலியானார், சம்பவ இடத்தை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணைமேயர் டி.நாக ராஜன், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர்பார்வையிட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு பாதாளச்சாக்கடை ஒப்பந்ததாரர் மூலம் இழப்பீடு பெற்றுத்தரப்படும். முதலமைச்சர் நிவாரண உத விக்கும் பரிந்துரைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் உறுதி யளித்துள்ளார். பாதாளச் சாக்கடை பணி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்றாலும் பொறியாளர் மட்டத்திலான அதி காரிகள் பணியிடத்தில் இருக்க வேண்டுமென்பது விதி என்பதை கோடிட்டுக்காட்டிய விஷயமறிந்த வர்கள், இந்த சம்பவம் நடந்தபோது மாநகராட்சி தரப்பில் அதிகாரிகள் இரு ந்து பொக்லைன் இயக்குபவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தால் தொழிலாளியை காப்பாற்றியிருக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.