states

img

100 நாள் வேலைக்கான கூலி கேட்டு பெண்கள் முற்றுகை

 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தீபாவளி பண்டிகை வருவதால் அனைவருக்கும் உடனடியாக சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாகச் சென்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒன்றிய செயலாளர் எஸ்.கோவிந்தராஜ்  தலைமை வகித்தார்.  மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஆம்பல் துரை.ஏசு ராஜா ஆகியோர்  உரையாற்றினர்.  வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.