states

சிறப்பாசிரியர்களின் அவலம்

தமிழக அரசால் 2012 இல் அனைவர்க்கும் கல்வி திட்டத்தின் கீழ் வட்டார 400 வள மையங்களில் சிறப்பாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்கு முன்பு வரை தொண்டு நிறுவனங்களில் இவர்கள் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வந்தனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பு குழந்தைகளை கனிவுடன் கவனித்து பணியாற்றி வரும் 1700 க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் மாதம் ரூ.16,000 மட்டுமே தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஒரு சில ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசின் ஊதியம் கிடைக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வாகி பணியாற்றும் இவர்களது பணி சாதாரண ஆசிரியர்களைவிட கடுமையானது. ஆனால், பாரபட்சமான ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற இவர்களது கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை.