திருப்பூர், ஜூன் 21- பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அப்பர் அமராவதி மற்றும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைக ளுக்கு மேல் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த அணைகளை கட்ட விவசாயிகள் வலியு றுத்தி உள்ளனர். வடகிழக்கு பருவ மழையால் திரு மூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் நிரம்பி உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்ப டுவதை தடுக்கும் வகையில் உபரி தண் ணீரை சேமிக்கும் வகையில் பல வருடங்க ளுக்கு முன்பு அமராவதி அணைக்கு மேல் பகுதியில் அப்பர் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைக்கு மேல் ஆனைமலையாறு நல்லாறு அணைகளை கட்ட அடிக்கல் நடப் பட்டது.
அப்பர் அமராவதி திட்டம்
அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் இணைந்து கூட்டாறாக அம ராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. கூட்டாறு வரும் வழியில் தூவானம் அருவி அமைத்துள்ள இடத்தில் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அப்பர் அம ராவதி அணை என்ற பெயரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த அணையில் சுமார் 5 டிஎம்சி நீரை சேமித்து வைத்து நீர் மின்சாரம் உற்பத்தி யும், கோடை காலங்களில் அப்பர் அமரா வதி அணையில் இருந்து தண்ணீரை அமரா வதி அணைக்கு கொண்டு செல்ல முடி யும்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்
பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தில் கட்டப்பட்ட திருமூர்த்தி அணைக்கு மேல் நீராறு அணை வழியாக சுமார் 120 கிலோ மீட் டர் தொலைவில் இருந்து தண்ணீர் சுற்றி வரு கிறது. தண்ணீர் வரும் தூரத்தைக் குறைக் கும் வகையிலும், கூடுதலாக தண்ணீரை சேமிக்கும் வகையில் திருமூர்த்தி அணை யில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள மாவடப்பு பகுதியில் இருக்கும் நல்லாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. அதே போல் இட்லி ஆற் றின் குறுக்கே ஆனைமலையாறு அணை கட்டுவதற்கான திட்டமும் நடைபெற வில்லை. இந்த அணைகள் கட்டப்பட்டால் நல் லாறு அணையில் இருந்து கால்வாய் வழி யாக சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் நேர டியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேரும். மேலும் கூடுதலாக மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைத்து கொள்ள முடியும். இதனால் சுமார் 8 டிஎம்சி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வறட்சி காலங்களில் கிடைக்கும். இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், புதிய அணைகளை கட்ட ஆய்வு கள் செய்து இடங்களை தேர்வு செய்து அங்கு அடிக்கல் நடப்பட்டு சுமார் ஐம்பது வருடங்கள் ஆன நிலையில் இந்த அணைகளை கட்ட எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல் இருப்பதால் தற்பொழுது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல, போதிய நீர் அணையில் இருப்பது இல்லை. இந்நிலையில், கடந்த வருடங்கள் அதிக மழையால் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் இருந்து உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டது. இந்த அணைகள் கட் டப்பட்டு இருந்தால் அதிகமான தண்ணீர் சேமித்து வைத்து இருக்க முடியும். தமிழக அரசு இந்த அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத் துள்ளார்கள்.