சென்னை, மே 17- தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரி யில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். 2 பேரின் நிலை தெரிய வில்லை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை யும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோரச்சம்பவத்தினால் உயிரிழந்தவர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றது. இரவு நேரத்தில் 400 அடி ஆழத்திற்கு கீழே குவாரியில் கற்களை அள்ளும் பணி யில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலா ளர்கள் ராட்சத பாறை சரிந்து உள்ளே விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மாக இறந்துள்ளனர். விதிகளை மீறி இரவு நேரத்தில் கல்குவாரி செயல்பட்டதும், குறு கிய நில பரப்பில் சுமார் நானூறு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டதுமே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும்.
இதற்கு காரணமான குவாரி உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்வதோடு, இந்த அளவு வரம்பு மீறி செயல்பட்ட குவாரிகளை கனிமவள அதி காரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்து அரசு உரிய விசாரணைக்கு உத்தர விட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழு வதும் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்து, சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல் படும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமி ழக அரசின் சார்பில் ரூ. 10 லட்சமும், தொழி லாளர் நல வாரியம் மூலமாக ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் அறிவித்துள்ளது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும் பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடுவதற்கு முதலமைச்சர் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.