states

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தகுதி வாய்ந்தவர்கள் யார்?

சென்னை, ஜூலை 29- மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் யார் யார் சேர தகுதி பெற்றவர்கள், எப்படி விண்ணப்பிப்பது என்பது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு மதுரை கலைஞர்  நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்து பேசும் போது முக்கிய  கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டார்.  அதாவது கல்வியும் சுகாதாரமும் தான்  இந்த ஆட்சியின் கண்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என்றால், உயர் கல்வி பயிலும்  மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது குடும்ப பொரு ளாதார நிலை காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதைப் போக்குவதற்காக உயர் கல்வியில் சேரும் மாணவி களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாயை  அவர்களது வங்கிக் கணக்கில் வழங்கும்  திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பயனாளி களை வரையறை செய்யும் வகையில் தகுதி விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு  வரை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்  மூலம் தமிழ்நாட்டில் உள்ள தனியார்  

பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம்  வகுப்பு வரை படித்த மாணவிகள், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் புதுமைப் பெண் திட்டத்தில் பயனாளி களாக முடியும். இளநிலை கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், டிப்ளமோ,  துணை மருத்துவம், ஐடிஐ, இளநிலை,  முதுநிலை இணைந்த படிப்புகளில் அந்த மாணவிகள் இணையும் போது ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கலை அறிவியல் என்றால் 3  ஆண்டுகள், பொறியியல் படிப்பு களுக்கு 4 ஆண்டுகள், மருத்து வப் படிப்புகளுக்கு 5 ஆண்டுகள் என  அவர்கள் தேர்வு செய்யும் கல்லூரி களுக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். அதே சமயம் படிப்பு முடித்த பின்னர் பயிற்சி காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படாது. ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு சென்றால் அனைவருக்குமே உதவித்தொகை வழங்கப்படும். வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற்றாலும் இந்த உதவித்தொகை வழங்குவதில் தடை இருக்காது. www.pudhumaipenn.tn.gov.in  என்ற இணையதளம் உருவாக்கப் பட்டுள்ள நிலையில் மாணவிகள் தங்கள் கல்லூரிகளின் ஒருங்கி ணைப்பாளர்கள் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற லாம் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.