states

விநாயகர் விழாக்கள் : பணம் எங்கிருந்து வருகிறது?

விநாயகர் சதுர்த்திக்கு ஒருமாதத்திற்கு முன்பே விநாயகர் சிலை செய்வதற்கான பரபரப்பான செய்திகள்; ஒவ்வொரு ஊரிலும் பத்து, இருபது விநாயகர் சிலைகள். ஒவ்வொரு சிலையும் 20 அடி, 30 அடி  உயரம்; கரையும் களிமண்ணுக்கு பதிலாக கரையாத திடப் பொருட்களினால் பிள்ளையார் செய்யப்படுகிறார். அரசு ஆயிரம் உத்தரவு போட்டாலும் விழாவை நடத்தும் இந்து முன்னணி, பாஜக இவர்களால் திரட்டப்பட்ட அடியாட்கள் கூட்டம் எதையுமே மதிப்பதில்லை.   கடந்த செப்டம்பர் 6 அன்று தினமலரில் ஆறாம் பக்கம் ஒரு செய்தி வெளியானது. விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை அண்ணாநகர் பகுதியில் 200 விநாயகர் சிலை யை மக்களுக்கு இலவசமாக வழங்க பாஜகவின் சிறுபான் மை குழு முடிவு செய்துள்ளது என்பது தான் அச்செய்தி. அப்பகுதி மக்களுடன் பாஜகவினரும் கலந்துகொண்டு இந்த  விழாவை கொண்டாடுவார்கள். இறுதிநாள் நிகழ்ச்சிகளில் ஆன்மீக பேச்சாளர்களை அழைத்து வந்து ஆன்மீக சொற் பொழிவுடன் சனாதனம் குறித்தும் விளக்கமளித்து பேசப் படும் இந்த செய்தியை பாஜகவின் முக்கிய நபர் வெளி யிட்டுள்ளார்.

இதை பார்க்கின்ற பொழுதே பாஜகவினரும், ஆர்எஸ்எஸ்சும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை எப்படி  பெரும் பிரச்சனையாக்கப் போகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. ஒவ்வொரு சிலைக்கு  ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு  செய்கிறார்கள். இதற்கு நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. விழாவை நடத்துவதற்கு விழாக் குழுவினர் என்ற பெயரில் இவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அந்த கும்பலிடம் பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுக் கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக பல நூற்றுக்கணக்கான நபர்களை திரட்டுகிறார்கள். அவர் களுக்கு உணவிலிருந்து, போக்குவரத்திலிருந்து, போதைப் பொருளுக்கும் கைச்செலவுக்கும் பணம் அள்ளி அள்ளிக் கொடுக்கப்படுகிறது. தேர்தல் நன்கொடை, அதானி, அம்பா னியிடம் வாங்கிய நன்கொடை என்று பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கிறது. அந்த பணம் கொடுக்கப்பட வில்லையென்றால் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி அமைதியாக முடிவடைந்திடும்.