states

ஆயுதங்களுடன் வந்தோர் மீது நடவடிக்கை எங்கே?

“மத ஊர்வலத்தில் (அனுமன் ஜெயந்தி) கலந்து கொள்பவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தி வர வேண்டும்? இவ்வாறு ஆயுதமேந்தி வந்தவர்கள் மீது ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தில்லி காவல்துறை இந்த வன்முறை விவகாரத்தில் ஒரு தரப்பினர் மீதே நடவடிக்கை எடுக்கிறது. அமித் ஷா எப்போது உள்துறை அமைச்சர் ஆனாரோ, அன்று முதல் தில்லியில் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது” என்றும் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.