states

ஒன்றிய அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது

திருவனந்தபுரம், ஜூலை 25- கேரள மாநிலத்தில் கொரோனா நெறி முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாக வும், குரங்கு காய்ச்சல் பாதிப்பினால், தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக திங்களன்று செய்தி யாளர்களிடம் பேசிய ஜார்ஜ், முகக்கவசம் அணிதல், கை சுத்த திரவம் பயன்படுத்து தல், சோப்பினால் கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கொரோனா மற்றும் குரங்கு காய்ச்சலுக்கு ஒரே மாதிரி யானவை.  குரங்கு காய்ச்சல் காரணமாக கொரோனா நெறிமுறைகளை மாநிலம் கடைப்பிடிக்கவில்லை என்று ஒன்றிய அரசு கூறுவது உண்மைக்கு மாறானது, அரசியல்  தன்மை கொண்டது. கொரோனா நெறி முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு கட்டாயம் பின்பற்றி வருகின்றது என்று கூறினார்.