ரஸ் ஆட்சியில் அமர்ந்த திலிருந்து, அதாவது, 2011லிருந்து மேற்கு வங்க மாநிலம் பதற்ற பூமியாகவே உள்ளது. சட்டம்- ஒழுங்கிற்கு அர்த்தம் தெரியாமல் ஆட்சி நடத்தி வரும் மம்தா பானர்ஜி மாநிலத்தில் நிகழும் குற்றங்களை கண்டுகொள்ளாமல் பொழுதைக் கழித்து வருகிறார். முன்னெப்பொ ழுதும் இல்லாத வகையில் கூலிப்படைகளின் ஆதிக்கத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் ‘துப்பாக்கி கலாச்சாரம்’ அதிகரித்துள்ளது. வணிகப் போட்டி, அரசியல் விரோதம், தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதி நிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஏன் ஒன்றிய அமைச்சர் கூட கூலிப்படையின் தாக்குதலில் சிக்கியுள்ள னர். ஏதோ ஒரு ஆதாயத்துக்காக நிகழும் கூலிப் படைகளின் தாக்குதலில் பல சமயங்களில் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மேற்கு வங்க மக்கள் ஒவ்வொரு நாளும் பதற்ற உணர்வுடனேயே உள்ளனர்.
கூலிப்படைகள் மூலம் அரங்கேறிய கொலைகள்
- 2017இல் மேற்கு மேதினிபூர் மாவட்டத் தில் உள்ள காரக்பூரில் உள்ளூர் திரிணாமுல் தலைவர் ஏ. ஸ்ரீனிவாஸ் நாயுடுவும் அவரது கூட்டாளிகளும் கூலிப்படைகளால் கட்சி அலு வலகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 2018 டிசம்பர் 13 அன்று ஜெய்நகரைச் சேர்ந்த திரிணாமுல் எம்எல்ஏ பிஸ்வநாத் தாஸை கூலிப்படைக் கும்பல் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சித்தது. இதில் பிஸ்வநாத் தாஸ் தப்பி னாலும், அவரது ஓட்டுநர், உதவியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 2019 பிப்ரவரி 9 அன்று திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் நாடியா மாவட்டத்தின் புல்பாரியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களால் பட்டப் பகலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2020 அக்டோபர் 5 அன்று பாரக்பூரைச் சேர்ந்த (வடக்கு 24 பர்கானா) செல்வாக்கு மிக்க பாஜக தலைவர் மணீஷ் சுக்லா சுட்டுக் கொல்லப்பட்டார். இப்போது திரிணாமுல் கட்சியில் இருக்கும் அப்போதைய பாஜக எம்பி அர்ஜுன் சிங், சுக்லாவின் உடலில் 19 தோட்டாக்கள் (4 ரவுண்டுகள்) இருந்ததாகக் கூறினார்.
- 2021 பிப்ரவரி 17 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, மாநில தொழிலாளர் துறை இணையமைச்சர் ஜாகிர் ஹூசைன், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிம்திடா ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதலில் காயமடைந்தார். இந்த தாக்கு தலில் சம்பவ இடத்தில் இருந்த பீடி வியாபாரி பலத்த காயம் அடைந்து வாழ்வின் இயல்பு நிலையை இழந்தார்.
- 2022இல் ஒரே நாளில் இரண்டு கவுன்சிலர்கள் கூலிப்படையால் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். p தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பட்ஜ் பட்ஜ் நகராட்சியைச் சேர்ந்த திரிணா முல் கவுன்சிலரான மிது திகாடர், அவரது கட்சி அலுவலகத்திற்குள்ளேயே சுட்டுக்கொல்லப் பட்டார்.
- வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் பனி ஹாட்டி நகராட்சியைச் சேர்ந்த திரிணாமுல் கவுன்சிலர் அனுபம் தத்தா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2023 பிப்ரவரி 13 அன்று புருலியா மாவட்டத்தில் உள்ள ஜல்டாவைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் தபன் காண்டுவை மோட்டார் சைக்கிளில் வந்த கூலிப்படை கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.
- 2023 பிப்ரவரி மாதம் தொழிலதிபரான அரவிந்த் பகத் அசன்சோலில் உள்ள அவரது சொந்த ஹோட்டலிலேயே சுட்டுக்கொல்லப் பட்டார்.
- 2023 ஏப்ரல் 1 அன்று மாநிலத்தின் பிரபல தொழிலதிபர் ராஜேஷ் ஜா, துர்காபூர் விரைவுச் சாலை உணவகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜேஷ் ஜா கொலைக்கான காரணம் தொடர் பாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாக வில்லை. ஆனால் ஆளும் திரிணாமுல் கட்சி க்கு தொடர்புடையவர்கள் தான் கொன்றனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அறியப்படாத கொலைகள்...
மேற்குறிப்பிட்ட கொலைகள் மிகவும் வெளிப்படையாக, கூலிப்படை மூலம் அரங் கேற்றப்பட்ட படுகொலைகள் ஆகும். இவற்றில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சி நபர்கள். அவர்களுக்குள் எழுந்த மோதல்களால் கூலிப்படையை ஏவித் தீர்த்துக் கட்டப்பட்ட வர்கள் மாநிலத்தில் இன்னும் ஏராளமான கொலைகள் மறைக்கப்பட்டுள்ளன. சாதாரண சம்பவங்கள் என புதைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் சேர்த்தால் மேற்கு வங்க மாநில கூலிப்படைகள் ஆதிக்கத்தின் உண்மை நிலவரம் தெரியவரும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொடர்பு
மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறும் கூலிப்படைக் கொலைகளில் பெரும்பாலா னவை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் அரங்கேற்றப்பட்டுள்ளன. சில கொலைகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே நேரடியான தொடர்பு உடையதாகவும் உள்ளன. தொழிலதிபர் ராஜேஷ் ஜாவின் கொலை விவகாரம் அரசியலுக்கும் கூலிப்படை குற்றங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இத்தனைக் கும் ராஜேஷ் ஜா பாஜக - திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பில் இருந்தவர் தான்.
அரசியல் மாற்றமே காரணம்
கூலிப்படை ஆதிக்கத்திற்கு மேற்கு வங்க அரசியலின் இயல்பில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என சமூக ஆர்வலர்களும், அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர். இது குறித்து முன்னாள் ஐஜி பங்கஜ் கே.தத்தா கூறுகையில், “மேற்கு வங்கத்தில் கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் முன்பு மாநிலத்தில் நடந்த அரசியல் கொலைகள் தொடர்பாக கொலையாளிகள் யாரென்று பொதுவாக அறியப்பட்டனர்; அதாவது மக்கள் அறியும்படி கண்டறியப்பட்டனர். ஆனால் 2011லிருந்து அரங்கேறும் மறைமுக கொலை கள் தொடர்பாக சாதாரண துப்பு கூட துலக்க முடியவில்லை. ராஜேஷ் ஜா கொலை போன்ற வழக்குகளுக்கு பொதுவான காரணம் கூலிப் படைகள்தான். கூலிப்படை என்பது தற்போ தைய மேற்கு வங்க அரசியலில் வளர்ந்து வரும் பயங்கரமாக உள்ளது” என்றார்.
பிரண்ட்லைன் (மே 19) இதழில், ஸுரித் சங்கர் சட்டோபாத்யாயா எழுதிய கட்டுரையில் இருந்து: எம்.சதீஸ்குமார்