states

img

மக்களைக் காப்போம், மகத்தான மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டுவோம்

சென்னை, ஜூலை 31 - மக்களைக் காப்போம், மகத்தான மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்திக் காட்டுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக காவல்துறைக்கு கவுரவமிக்க ‘குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும்  விழா’ சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் ஞாயிறன்று (ஜூலை 31) நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு முத மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:   தமிழகக் காவல்துறையின் வர லாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. குடியரசுத் தலை வரினுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழக காவல்துறை பெறுகிறது. தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டி ற்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது, தனிப்பட்ட ஒரு காவல ருக்குக் கிடைத்த பெருமை அல்ல இது,  ஒட்டுமொத்தமாக அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல, தமிழ்நாடு காவல்துறைக் காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீ காரம் இது.  

1856ல் துவங்கிய வரலாறு

பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856-ஆம்  ஆண்டு அன்றைய மதராஸ் மாநக ரில்தான் முதன்முதலில் காவல்துறை வர லாறு தொடங்கியது. 1859-ஆம் ஆண்டு மதராஸ் மாகாண காவல்துறைச் சட்டம்  இயற்றப்பட்டது. எனவே நமது காவல்துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரி யான காவல் துறை. பொது அமைதியைக் காப்பது, குற்றங்களில் இருந்து மக்க ளைக் காப்பது, சட்டங்களைக் காப்பது, பொது மக்களைக் காப்பது, ஒட்டுமொத்த மாகச் சொன்னால் மக்களைக் காப்பது, இதுதான் உங்களது முழு முதல் பணி.    கைரேகைப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு, புகைப்படப் பிரிவு, கணினித் தொழில்நுட்பப் பிரிவு, கடலோரப் பாது காப்புப் பிரிவு, மகளிர் கமாண்டோ பிரிவு எனப் பல்வேறு பிரிவுகள், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டு மல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது! அகில  இந்திய காவல் திறனாய்வுப் போட்டி களில் தமிழ்நாடு காவல்துறை கடந்த  30 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல் பட்டு, பல பதக்கங்களை வென்று வரு வதை நினைக்கும்போது ஒவ்வொரு தமிழ்நாட்டவரும் பெருமை கொள்ளக் கூடிய அளவில் அமைந்திருக்கிறது.  கடந்த ஓராண்டு காலமாக காவல்துறையின் செயல்பாடு முன்பை விட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது. மதக்கலவரங்களோ, சாதி  மோதல்களோ, மக்களைப் பீதிக்கு உள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல்நிலைய மரணங்கள் குறைந்துள் ளன. காவல்நிலைய மரணம் 2018-ஆம் ஆண்டு 17 மரணங்கள் என்று பதி வானது, 2021–ஆம் ஆண்டு 4 மர ணங்களாக குறைந்துள்ளது. குறைந் துள்ளது என்றுதான் சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று நான்  சொல்லவில்லை. காவல்நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தித் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். 

சிறு குற்றம் நடந்தாலும்...

குற்றங்களை குறைக்கும்துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். சில சிறு குற்றம் நடந்தா லும், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் பிடி யில் இருந்து தப்பிவிடக் கூடாது. பாலி யல், போக்சோ சட்டங்களில் சிக்கு பவர்களை உடனடியாக கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி யாக வேண்டும்.  அமைதியான மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால்தான் ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ கத்தை நோக்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்பதன் அடையாளங்கள் ஆகும். மக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். காவலர்களை நாங்கள் பாதுகாக்கிறோம். காவலர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற் காகத்தான் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில், காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருவோம் என உறுதி அளிக்கிறேன்.  காவல் அதிகாரிகளும், காவல் ஆளி நர்களும் கவலையின்றிப் பணியாற்று வதற்கான சூழல்களை அமைத்துத் தர இந்த அரசு தயாராக உள்ளது. குடியரசுத் தலைவரின் விருது பெற்றிருக்கும் தமிழக காவல்துறையினர் தங்கள் காக்கிச் சட்டையில் அதன் அடையாளமான கொடியினை அணிந்து செல்வார்கள். ‘நிஸான்’ என்றழைக்கப்படும் இந்தச் சின்னம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். தமிழ்நாடு காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு காவல்துறை தலை மை இயக்குநர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.  மக்களைக் காப்போம், மகத்தான மாநில மாகத் தமிழகத்தை உயர்த்திக் காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.