சென்னை,ஏப்.21- மாற்றுத்திறனாளிகளின கோரிக்கைகளை படிப்படியாக நிச்சயம் அரசு நிறைவேற்றும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் வியாழனன்று(ஏப்.21) சமூக நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர்,“ மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து, என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன; என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைக்கமுடியும். மேலும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தப்படும். அதில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயமாக நிறைவேற்றுவோம்” என்றார்.