நாங்கள் பல ஆண்டுகளாக காஷ்மீர் தாக்குதலை தொடர்நது பார்த்து வருகிறோம். ஆனால் இதன் முடிவினை நான் இன்னும் பார்க்கவில்லை. ரஜோரி போன்ற இடங்களில் நடக்கும் என்கவுன்டர் பற்றி அனை வரும் கேள்விப்படும் நேரத்தில், தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறுகின்றது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை தீவிரவாதம் முடிவுக்கு வராது. சண்டை அமைதியைத் தராது. பேச்சுவார்த்தையே அமைதியைத் தரும்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா