புதுதில்லி, ஜூன் 7- முகம்மது நபிகள் குறித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தங்களின் இழிவான பேச்சும், அதற்கு எதிரான வளைகுடா நாடுகளின் எதிர்வினையும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடியாக மாறலாம் என்று பொரு ளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். வளைகுடா நாடுகள் இவ்விவகாரத் தில் சற்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும், அனைத்து வகை யிலும் இந்தியாவுக்கு வளைகுடா நாடு களின் உறவு அவசியம்; மாறாக, வளை குடா நாடுகளுடனான உறவை முறித்துக் கொள்ளும் முயற்சி மோசமானதாகவே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, பாஜக செய்தித் தொடர் பாளர் நுபுர் சர்மா, இஸ்லாம் மார்க்கத் தின் இறைத்தூதரான முகம்மது நபிகள் குறித்து மிகமோசமான வகையில் அவ தூறாகப் பேசி பெரும் சர்ச்சையை ஏற் படுத்தினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், பாஜகவின் மற்றொரு செய் தித் தொடர்பாளரான நவீன் குமார் ஜிண்டாலும், நுபுர் சர்மாவுக்கு ஆதர வாக பேசி, நபிகளை மீண்டும் இழிவு படுத்தினார்.
முகமது நபிகளை இழிவுபடுத்தியது பாஜக-வின் செய்தித் தொடர்பாளர்கள் என்பதைத் தாண்டி; அவர்கள் இந்திய ஆளும் கட்சி பிரதிநிதிகள் என்பதால், இவ்விவகாரம் இந்தியா மட்டுமன்றி உல களாவிய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் பரவிய பாஜக தலைவர்களின் பேச்சுக் கள், வளைகுடா நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்தியாவைப் புறக்கணிப்போம் (#boycott india), இந்தியப் பொருட்க ளைப் புறக்கணிப்போம் (#boycott indian products) என்ற ஹேஷ்டேக்கு கள், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் வேகமாக டிரெண்ட் ஆகின. சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் போன்ற நாட்டின் வர்த்தக நிறுவனங்க ளில் இந்திய தயாரிப்பு பொருட்கள் கடை களிலிருந்து அகற்றப்பட்டன. இந்தியப் தயாரிப்புகள் விற்கப்படும் கடைகளில் இந்திய பொருட்கள் மீது தடை செய்யப் பட்ட பொருட்கள் என்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும், ஈரான், ஈராக், குவைத், கத் தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், ஆப்கா னிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேசியா உள் ளிட்ட 15-க்கும் அதிகமான நாடுகள், நபிகள் குறித்த இந்திய ஆளும் கட்சித் தலைவர்களின் பேச்சு குறித்து, தங்க ளின் கண்டனத்தையும் பதிவு செய்தன. இந்தியத் தூதர்களை அழைத்தும் விளக்கம் கேட்டன.
ஒருகட்டத்தில் பிரச்சனை தீவிரமா வதை உணர்ந்த பாஜக தலைமை, நுபுர் சர்மாவையும், நவீன் குமார் ஜிண்டாலை யும் செய்தித் தொடர்பாளர்கள் பொறுப் பிலிருந்து நீக்கியது. அத்துடன், “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாஜக எந்த ஒரு பிரிவினரையோ அல் லது மதத்தையோ அவமதிப்பதையும் அல்லது இழிவுபடுத்துவதையும் நாங்கள் ஊக்குவிப்பதில்லை” என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். எனினும், “உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ் லாமியர்களை புண்படுத்தும் வகை யில் இந்திய ஆளும்கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என்று “இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு” கறார் காட்டியது. “இந்திய அரசு அனைத்து மதங்க ளுக்கும் உச்சபட்ச மரியாதையை அளிக்கிறது. தேவையற்ற மற்றும் குறு கிய எண்ணம் கொண்ட கருத்துக் களை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கி றது. ஒரு மத ஆளுமையை இழிவுபடுத் தும், புண்படுத்தும் டுவீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய் யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந் திய அரசின் கருத்துக்களைப் பிரதி பலிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கட்சி களால் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து விட்டது. இதனிடையே, முகம்மது நபிகள் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தில், வளைகுடா நாடுகளிடம் இந்தியா பணிந்து போகக் கூடாது என்று பாஜக வுக்கு உள்ளேயே கருத்துக்கள் உருவா கின. சுப்பிரமணியசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர், பகிரங்கமாகவே இதனை கூறத் துவங்கினர்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி யவர்கள் பலருக்கு பாஜகவில் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. தில்லி சிஏஏ-வுக்கு எதிரான போராட் டத்தின் போது, வன்முறையைத் தூண்டி விட்ட கபில் மிஸ்ரா போன்றவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்பட் டுள்ளன. அப்படியிருக்க, நுபுர் சர்மா வையும், நவீன் குமார் ஜிண்டாலையும் நீக்கியிருப்பது சரியானதல்ல; பாஜக தலைமை இதுபோன்று அவர்களை கை விட்டதை ஏற்க முடியாது சமூகவலை தளங்களில் பாஜக-வினர் தங்களுக்கு உள்ளாக விவாதங்களை நடத்தி வரு கின்றனர். நுபுர் சர்மாவையும், ஜிண்டா லையும் நீக்கியதை பாஜகவிற்கு அவ மானம் என்று குறிப்பிடும் (#Shame OnBJP) ஹேஷ்டேக்கையும் அவர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்ற னர். பாஜகவுக்கு வெளியில் இருப்பவர் களும், மசூதிகளில் பாங்கு ஒலிக்கக் கூடாது; ஹலால் செய்யப்பட்ட இறைச் சிக்கு தடை, ஹிஜாப் அணியக் கூடாது; மாட்டிறைச்சி வைத்திருந்தால் கும்பல் படுகொலை, லவ் ஜிகாத் தடைச் சட் டம் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக அடுத்தடுத்து தாக்குதலை அரங்கேற்றி வந்த ஒன்றிய ஆளும் கட்சியான பாஜக, இப்போது நபிகளை இழிவுபடுத்திய விவகாரத்தில் மட்டும், அதுவும் வளை குடா நாடுகளிடம் இந்த அளவிற்கு பம்மு வது ஏன்? என்ற சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
பொருளாதார நலன்
இந்நிலையில்தான், வளைகுடா நாடுகள் விவகாரத்தில் பாஜக அரசு அவ்வளவு எளிதில் முறித்துப் பேசிவிட முடியாது என்றும், அதற்கு நிறைய கார ணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, பொருளாதார நலன்களே இதில் பிர தானம் என்று பொருளாதார வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அதுதொடர் பான புள்ளிவிவரங்களையும் வெளி யிட்டுள்ளனர். அவை வருமாறு: இந்தியாவில் கச்சா எண்ணெய், எரி வாயு ஆதாரங்கள் இல்லை என்பதால் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளை நம்பி மட்டுமே இந்தியா இயங்கி வருகிறது. இது அனைவருக் கும் தெரிந்ததுதான். இப்போதும், அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால்- ஒரு மாதம் எரிபொருள் விநியோகத்தை நிறுத் தினால் போதும் இந்தியா மொத்தமும் முடங்கி விடும் நிலை உள்ளதாக கூறும் பொருளாதார வல்லுநர்கள், இந்தியா வின் ஒரு நாளுக்கான பெட்ரோலியப் பொருட்களின் தேவையில், 60 சதவிகிதம் வளைகுடா நாடுகளில் இருந்தே பெறப் படுகிறது. குறிப்பாக ஈராக், சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டுமே 50 சதவிகித பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படு கின்றன. எனவே, பெட்ரோலியப் பொருட் களுக்காகவாவது, இந்தியா வளைகுடா நாடுகளுடனான தனது உறவை சுமுக மாக வைத்திருப்பது அவசியமாகிறது. 2018-ஆம் ஆண்டில் இந்தியா வுக்குள் வந்த பணம் குறித்த, ரிசர்வ் வங்கியின் ஆய்வானது, வெளிநாடுகளி லிருந்து இந்தியா பெற்ற மொத்தப் பணப்பரிமாற்றங்களில் 82 சதவிகிதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), அமெரிக்கா (அமெரிக்கா), சவூதி அரேபியா ஆகிய ஏழு நாடுகளில் இருந்து வந்த தாகக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக, இந்த 82 சத விகித அந்நிய செலாவணியில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் 58.7 சதவிகிதம் அந்நிய செலா வணியை ஈட்டியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் 89 பில்லியன் டாலர் வருமானத்துடன், கடந்த ஆண்டு உலக அளவில் பணம் அனுப்பப்பட்ட நாடு களில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், அங்கு சம்பாதித்து இந்தியாவிற்கு பணம் அனுப்புவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் ஆண்டுதோறும் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேல் வளைகுடா நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் தங்கிப் பணியாற் றும் 3 கோடியே 20 லட்சம் (32 மில்லியன்) இந்தியர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் அரபு நாடுகளில்தான் பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியின ராக இந்தியர்களே உள்ளனர். மொத்த மாக வளைகுடா நாடுகளில் 89 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்தியர்கள் பெரிய தொ ழில் நிறுவனங்களையும், உணவகங்களை யும் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், நுபுர் சர்மா போன் றோரின் பேச்சுக்கு அரபு நாடுகள் நட வடிக்கை எடுத்தால் எரிபொருள் தடை மட்டும் அல்லாமல் பல கோடி பேரை வேலையை விட்டு நீக்க முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இவர் களுக்கு இந்திய அரசால் வேலை வாய்ப்பு கொடுக்க முடியுமா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இவைதவிர, பிப்ரவரி 2022 இல் இந்திய அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட விரி வான பொருளாதார கூட்டு ஒப்பந்தமா னது (CEPA) இந்திய அரசு, வளைகுடா கூட்டமைப்பு நாடுகளுடன் (GCC) மேற் கொண்டுள்ள மிகப்பெரிய ஒப்பந்தமா கும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் இரு நாடு களுக்கும் இடையிலான வணிகப் பொருட் களின் வர்த்தகத்தை 100 பில்லியன் டாலரை நோக்கி உயர்த்துவதை நோக்க மாகக் கொண்டு, இந்தியா - யுஏஇ (CEPA) ஆனது, “டிஜிட்டல் வர்த்தகம்” மற்றும் “அரசு கொள்முதல்” உட்பட பல விதி களை ஏற்படுத்தியுள்ளது. அவை இந்தியா கையெழுத்திட்டுள்ள பிற இருதரப்பு ஒப்பந்தங்களில் காண முடியாது. 2021-22ல் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐக்கிய அரபு எமிரேட் இருந்தது. சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகியவை இந்தியா வின் முதல் 25 வர்த்தக பங்குதாரர்க ளில் இடம்பிடித்துள்ளன. 2021- 22ல் ஐக்கிய அரபு அமீரகத்திற் கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க் கும் அதிகமாக இருந்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்குள் 7 லட்சம் கோடி அள விற்கு வர்த்தகம் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா கடந்த நிதியாண்டில் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடாக இருந்தது. இருதரப்பு மொத்த வர்த்தகம் முந் தைய நிதியாண்டில் 22 பில்லியன் டாலரி லிருந்து 2021-22இல் சுமார் 43 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியா கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன் எல்என்ஜி-யை இறக்குமதி செய்கிறது. தானி யங்கள் முதல் இறைச்சி, மீன், ரசாய னங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வரை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 2020-21-ல் 9.21 பில்லியன் டாலரிலிருந்து 2021- 22-இல் 15 பில்லியன் டாலராக உயர்ந்துள் ளது. குவைத் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் 27-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கிறது. இருதரப்பு வர்த்தகம் அளவு முந்தைய நிதியாண்டில் 6.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ல் 12.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், 2021-22ல் இந்தியா வின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக விளங்குகிறது. ஐக்கிய அரபு நாட்டுடனான இந்தியாவின் இரு தரப்பு வர்த்தகம் 2020-21ல் 43.3 பில்லி யன் டாலராக இருந்த நிலையில் 2021- 22ல் 72.9 பில்லியன் டாலராக அதிகரித் துள்ளது. ஓமன் 2021-22ல் இந்தியாவின் 31-ஆவது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக உள்ளது. ஓமன் நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020- 21ல் 5.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் சுமார் 10 பில்லி யன் டாலராக அதிகரித்துள்ளது. பஹ்ரைன் இந்தியா இடையிலான இருவழி வர்த்தகம் 2020-21ல் 1 பில்லி யன் டாலரில் இருந்து 2021-22ல் 1.65 பில்லியன் டாலராக இருந்தது. ஈரானுட னான இந்தியாவின் இருதரப்பு வர்த்த கம் 2020-21ல் 2.1 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் 1.9 பில்லி யன் டாலராக இருந்தது.
அதேபோல, சமையல் எண்ணெய்க்கு இந்தியா அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகளில் இந்தோனேஷியா மிகவும் முக்கியமான ஒன்று, சமீபத்தில் இந்தோ னேஷியா சில நாட்கள் மட்டுமே பாமா யில் ஏற்றுமதி தடை செய்த போது இந்தியா கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. வளைகுடா நாடுகள், தங்களது உண வுப் பொருள் தேவையில் 85 சதவிகி தத்தை இறக்குமதி செய்கின்றன. அதில் இந்தியாவில் இருந்துதான் பெரும்பா லான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அரிசி, மாட்டிறைச்சி, மசாலா பொருட்கள், பழங் கள், காய்கறிகள், சர்க்கரை போன்ற பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு வளைகுடா நாடுகளும் இந்தியாவும், வர்த்தகம் மற்றும் பிற விஷயங்களில் இணைந்து செயல்படும் வேளையில், சுமுகமான உறவு இரு நாடுகளுக்கும் தேவையான ஒன்றென பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின் றனர். இவ்வாறிருக்கும் சூழலில், இரு நாடு களுக்கும் இடையேயான உறவில் ஏற்படும் விரிசல் அனைவருக்கும் பாதக மாகவே அமையும் என்பது பொருளா தார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர்களை ஒதுக்க முடியும். மாறாக, இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை ஆட்சியாளர்களால் அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியாது என்பதே அவர்களின் கூற்றாக உள்ளது.