states

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை: அமைச்சர்

சென்னை, மே 10- வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வா யன்று (மே10) நடந்த கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன், “வெளிநாடு வாழ் தமிழர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஒரு தெளிவான வரை யறையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து  பெறுவதற்கு மாநில அரசு  நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றார். இதற்குப் பதிலளித்த செஞ்சி மஸ்தான், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இருக்கும் இடத்தில் வாக்களிக்க  தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் வெளிநாடு வாழ் தமிழர்களும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களிக்க தேர்தல் ஆணையத்திடம்  அனுமதி பெற துறை சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.