சென்னை,ஜூன் 21- நீரிழிவு நோய் காரணமாக தேமு திக தலைவர் விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ள தாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித் துள்ளது. நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளி யானது. இது தொடர்பாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. இந்த அறிக்கையில், “நீண்ட வரு டங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்ச னையால் தேமுதிக தலைவர் விஜய காந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்க ளின் ஆலோசனைப்படி திங்களன்று (ஜூன் 20) விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். விஜயகாந்த் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நிர்வாகி கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.